8. நன்னெறி |
|
|
முனிவினு நல்குவர் மூதறிஞ ருள்ளக் கனிவினு நல்கார் கயவர்-நனிவிளைவில் காயினு மாகுங் கதலிதா னெட்டிபழுத் தாயினு மாமோ வறை.
|
(28) |
|
|
உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றோர் அடுக்கு மொருகோடி யாக-நடுக்கமுறார் பண்ணிற் புகலும் பனிமொழியா யஞ்சுமோ மண்ணிற் புலியைமதி மான்.
|
(29) |
|
|
கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன் உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே-வெள்ளம் வருவதற்கு முன்ன ரணைகோலி வையார் பெருகுதற்க ணென்செய்வார் பேசு.
|
(30) |
|
|
பேரறிஞர் தாக்கும் பிறர்துயரந் தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார்-நேரிழாய் மெய்சென்று தாக்கும் வியன்கோ லடிதன்மேற் கைசென்று தாங்குங் கடிது.
|
(31) |
|
|
பன்னும் பனுவற் பயன்றே ரறிவிலார் மன்னு மறங்கள் வலியிலவே-நன்னுதால் காழொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ தாழொன் றிலதாயிற் றான்.
|
(32) |
|
|
எள்ளா திருப்ப விழிஞர்போற் றற்குரியர் விள்ளா வறிஞரது வேண்டாரே-தள்ளாக் கரைகாப் புளதுநீர் கட்டுகுள மன்றிக் கரைகாப் புளதோ கடல்.
|
(33) |
|
|
|
28. முனிவு-சினம். மூதறிஞர்-பேரறிஞர்கள். கதலி-வாழை. பழுத்தாயினும்-பழுத்தாலும். 29. பரத்துற்றோர்-பரம்பொருளை நாடியிருப்பவர்கள். பனிமொழி-குளிர்ந்தமொழி. மதிமான்-திங்களில் உள்ளமான். 30. கொள்ளும்-உயிரைக் கொள்ளும். குறுகுதல்-அடைதல். பெருகுதற்கண்-வெள்ளம் வந்த பொழுது. 31. தாக்கும்-துன்புறுத்தும். வீரம்-ஆண்மை. கோலடி-பிரம்பாலடிக்கும் அடி. கடிது-விரைவாக. 32. பனுவல் பயன்-நூற்பயன். பன்னும்-கூறும். தேர்-தெளியும். காழ்-வலிமை. 33. எள்ளாது-இகழாது. விள்ளா-பழிச்சொல்லுக் காளாகாத.
|
|
|
|