8. நன்னெறி |
|
|
அறிவுடையா ரன்றி யதுபெறார் தம்பாற் செறிபழியை யஞ்சார் சிறிதும்-பிறைநுதால் வண்ணஞ்செய் வாள்விழியே யன்றி மறைகுருட்டுக் கண்ணஞ்சு மோவிருளைக் கண்டு.
|
(34) |
|
|
கற்ற வறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள் மற்றையர்தா மென்று மதியாரே-வெற்றிநெடு வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி பால்வேண்டும் வாழைப் பழம்.
|
(35) |
|
|
தக்கார்க்கே யீவர் தகார்க்களிப்பா ரில்லென்று மிக்கார்க் குதவார் விழுமியோர்-எக்காலும் நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி புல்லுக் கிறைப்பரோ போய்.
|
(36) |
|
|
பெரியார்முற் றன்னைப் புனை ந்துரைத்த பேதை தரியா துயர்வகன்று தாழுந்-தெரியாய்கொல் பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய் விந்தமலை தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.
|
(37) |
|
|
நல்லார் செயுங்கேண்மை நாடோறு நன்றாகும் அல்லார் செயுங்கேண்மை யாகாதே-நல்லாய்கேள் காய்முற்றிற் றின்றீங் கனியா மிளந்தளிர்நாள் போய்முற்றி னென்னாகிப் போம்.
|
(38) |
|
|
கற்றறியார் செய்யுங் கடுநட்புந் தாங்கூடி உற்றுழியுந் தீமைநிகழ் வுள்ளதே பொற்றொடீ சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த அன்றே மணமுடைய தாம்.
|
(39) |
|
|
|
34. அதுபெறார்-அறிவிலார். செறி-பொருந்திய. பிறை நுதால்-பிறைபோலும் நெற்றியை உடையவளே. இவ்வாறு பெண்களை விளித்துக் கூறுதலை மகடூஉமுன்னிலை என்பர். இத்தகைய மகடூஉமுன்னிலைகள் தமிழ் நூல்களில் பல விடங்களினும் வருவதைக் காணலாம். இவ்வாறு ஆடூஉமுன்னிலையுமுண்டு. 35. காமுறுவர்-விரும்புவர். வேல் வேண்டும்-வேல் விரும்பும். 36. விழுமியோர்-மேலோர். மிக்கார்-தீமையில் மிக்கவர்கள். முளிபுல்-காய்ந்தபுல். 37. புனைந்துரைத்த-புகழ்ந்து பேசிய. உயர்வு தரியாது அகன்று-பெருமை நிலைபெறாமல் நீங்கி. தாழும்-இழிவடைவான். பொன்னுயர்வு-திருமகளின் பெருமையை. 38. கேண்மை-நட்பு. அல்லார்-தீயோர். 39. தாம் கூடியுற்றுழியும்-கூடியிருக்கும் வரையிலும்.
|
|
|
|