9. திருவெங்கைக்கோவை |
|
இதுவுமது |
|
|
முலைப்பகை யோகட் பகையோ வவர்தம் முகப்பகையோ மலைப்பகை யாம்விண் முழுதாளி யென்றும் வணங்குமயன் றலைப்பகை யாய கரமுடை யான்வெங்கை சார்ந்துநின்ற சிலைப்பகை யாகு நறுநுத லார்தந் திருமனையே.
|
(3) |
|
துணிவு |
|
|
சேணும் பிலமு மலர்மா ளிகையுஞ் செழுஞ்சிலம்பும் நாணும் படிநம் படியே தவப்பய னண்ணியமை பூணும் பணியரன் வெங்கையின் மாநிழற் பூம்பொழில்வாய்க் காணும் பிறைநுத லாட்சும வாநின்று காட்டியதே.
|
(4) |
|
குறிப்பறிதல் |
|
|
பாயு மலர்த்தண் பொழில்சூழும் வெங்கைப் பழமலைசீர் ஆயு முனிவரர் தாமே முனிவரு ளாக்குதல்போல் நோயுமந் நோய்க்கு மருந்துந் தராநிற்கு நூற்பகவிற் றேயு மருங்குற் பெருமுலை மாதர் திருக்கண்களே.
|
(5) |
|
|
|
3. மலைப்பகையாளி-இந்திரன். அயன்-நான்முகன். ஒரு காலத்தில் மலைகள் சிறைகளையுடையனவாய்ப் பறந்து நகரங்களின் மீதமர்ந்து அந்நகரங்களைப் பாழ்படுத்த இந்திரன் அம்மலைகளின் சிறகுகளையறுத்துத் தள்ளினனாகையால் மலைப்பகையாளி என்றார். சிலை-வில். நறு-அழகிய. முலையும் கண்ணும் முகமுங் கூறுதலான், முறையே மலைமகளோ, கடல்மகளோ அன்றி மலர்மகளோவென ஐயப்பட்டவாறாயிற்று. நான்முகனுடைய தலைகளில் ஒன்றைக் கிள்ளியெறிந்தபடியால் இறைவன் கை நான்முகன் தலைப்பகையாயது. 4. சேண்-விண்ணுலகம். பிலம்-பாதாளலோகம். மலர்மாளிகை-தாமரைவீடு. நம்படி-நமதுபூமி. நம்படியே சுமவாநின்று நண்ணியமை காட்டியது என்க. 5. நூல்பகவு-நூலிழையின்வகர். முனிவு-சினம்.“இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து” என்னுந் திருக்குறட் கருத்தைக் கொண்டதிப்பாட்டு.
|
|
|
|