| 9. திருவெங்கைக்கோவை |
|
இயற்கைப்புணர்ச்சி இரந்துபின்னிற்றற்கெண்ணல் |
| |
| |
புரந்தாடு மையர் திருவெங்கை வாணர் பொருப்பினின்ற அரந்தா ழயிற்கண் மடமா திரத்தக்க ராதலினால் இரந்தாய் குவமிவர் தந்தன நாமின் றினியநெஞ்சே கரந்தா னமக்குப் பழியுள தாயிற் கழறுகவே.
|
(6) |
| |
| இரந்துபின்னிலைநிற்றல் |
| |
| |
தாளுந் தரக்கன் றனைமீண் டெடுத்துய்யத் தண்ணளியால் ஆளும் பழமலை வெங்கையன் னீரொன் றலாதுபல வாளுங் கணையுங் கதிர்வேலு மானு மதர்விழியால் நீளுந் துயர்செய்து வாளாநின் றீரிது நீதியன்றே.
|
(7) |
| |
| முன்னிலையாக்கல் |
| |
| |
பாரக்கைச் சூலத்தர் வெங்கையி லேகண் பகைத்துநின்ற வாரக்கட் பூஞ்சுனைப் போதையெல் லாமட லோடுமடல் சேரக்கட் டிக்குழற காட்டிலி டாமற் சிறந்தவலங் காரக்கட் பேதை தனித்துநின் றாயென்ன காரணமே.
|
(8) |
| |
| மெய்தொட்டுப்பயிறல் |
| |
| |
மெய்கூ றிடும்வரை மங்கைம ணாளர்தம் வெங்கையினிற் பொய்கூற றிலஞ்சிலர் போலிலை யேயெனப் புல்லிழையிற் செய்கூ றதிலொன் றளவுள தேயிவள் சிற்றிடைதான் மைகூர் குழலில் வெறிகொண் டுலாவு மதுகரமே.
|
(9) |
| |
|
| |
6. புரந்து-யாவரையும் காப்பாற்றி. அரந்தாழ்-அரத்தினால் அராவப்பட்ட. கரந்தால்-இல்லையென்று மறைத்தால்“இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று”என்னுந் திருக்குறளின் கருத்தது. 7. அரக்கன்-இராவணன். உய்ய-பிழைக்க. அன்னீர்-நிகர்த்தவரே. எனக்குத் துன்பஞ்செய்த நீர் அருள்புரியாமல் நிற்பது தக்கதன்று என்பது கருத்து. 8. கைபாரம் சூலத்தர்-கையிற்பாரம் பொருந்திய சூலப்படையை உடையவர். சுனைப்போது-சுனையிலுள்ள மலர்கள். குழல் காடு-கூந்தற்காடு. வார் கள் என்பதை கள் வார் என மாற்றுக. கள் வார்-தேனொழுகுகின்ற. கண்ணுக்குப் பகையாவது மலர். அது கண்ணை யொத்திருத்தலால் “கண் பகைத்து நின்ற வாரக்கட் பூ” என்றார் என்க. 9. புல்இழை-நுண்ணியநூல் இழை. மைகூர் குழல்-கருமை மிகுந்த கூந்தல். மை-கருமை. மதுகரம்-வண்டுகள். செய்-இங்கே வகிர்ந்த.
|
|
|
|