| 9. திருவெங்கைக்கோவை |
|
| இடையூறு கிளத்தல் |
| |
| |
மதயானை யீருரி யூடே மறைந்து மழைமறைத்த உதயா திபனென நின்றார்தம் வெங்கையி லுன்றனைப்போற் கதையா லெனினு மறிந்திலம் வேள்கல கத்தணங்கே புதையாது பைம்பொற் குடங்கதிர் வாளைப் புதைப்பதுவே.
|
(15) |
| |
| நீடுநினைந்திரங்கல் |
| |
| |
சூலக் கரத்தர் திருவெங்கை வாணர்முன் சுட்டமதன் நீலக் கணையிற்கை வைத்தா னினிச்சற்று நேரநிற்பிற் காலற் கிரையிடு மென்னா வியையிந்தக் காரிகையார் கோலக் களபக்குன் றென்றோ மருவக் குறுகுவதே.
|
(16) |
| |
| மறுத்தெதிர்கோடல் |
| |
| |
சந்தாப வெந்தழ றன்னடி யார்க்குத் தணித்தருளுஞ் செந்தா மரைமலர்த் தாளர்தம் வெங்கைச் செழுஞ்சிலம்பில் நந்தா மதுகை யொடுபிறப் பேழு நமைத்தொடர்ந்து வந்தார் தமையிந் நிறையோ வராமன் மறிப்பதுவே.
|
(17) |
| |
| வறிதுநகைதோற்றல் |
| |
| |
புல்லார் பவர்கணெற் சோறுபெற் றாங்குப் பொருந்தியென்றும் அல்லார் மதிய நிலவுண் சகோர மருந்தவுங்கல் வில்லார் திருவெங்கை யன்பர் முகாம்புயம் வீறுதவும் நல்லார் வதன மதியிடந் தோன்று நகைநிலவே.
|
(18) |
| |
|
| |
15. மத யானை ஈருரி-கயா சுரனது தோல். வேள் கலகம்-காமப்போர். பைம்பொற்குடம்-கொங்கை. உதயாதிபன்-இளங்கதிரவன். உன்றனைப் போலப் புதைப்பது கதையாலும் அறிந்திலம் என்க. இத்துறை நாணிக் கண்புதைத்தலெனவும்படும். 16. நீலக்கணை-நீலமலராகிய அம்பு. களபக்குன்று-சந்தனமலை (கொங்கை.) இம்மலையரண் கிடைக்கின் மதனை வெல்லலாம் என்பது. 17. சந்தாபம்-பிறவிவெப்பம். நந்தா-கெடாத. மதுகை-வலி. நிறை-கற்பு. 18. புல்லார்பவர்-புல்ைலையுண்பவர்கள். அல் ஆர்-இரவிற் பொருந்தும். வீறு உதவும்-பெருமகிழ்ச்சியைக் கொடுக்கும். அருந்தவம் குறைவின்றித் தோன்றும் என்பது. முகாம்புயத்துக்கு என உருபு விரிக்க.
|
|
|
|