| 9. திருவெங்கைக்கோவை |
|
| இடமணித்தென்றல் |
| |
| |
சீறாக் கயல்விழி மாதேதென் வெங்கைச் செழும்பதியான் கூறாய்த் திகழ்திரு மேனியு மாதுமை கூறுடலும் வேறாய்ப் புணர்வதென் னோவந்துன் சாரல் வியன்பதியும் மாறாப் பழனத் தெமதூரு மொன்றி மருவுறுமே.
|
(28) |
| |
| தெளிவு |
| |
| |
பழிமாற் றியபுகழ் வெங்கைபு ரேசர் பனிவரைமேல் மொழிமாற் றெனும்பொருள் கோளினல் லாமன் மொழிபிறழார் சுழிமாற் றியவுந்தி யாய்வரு வேனெனச் சொல்லியவவ் வழிமாற்ற மும்பிறழ் மோபிற ழாது மறப்பினுமே.
|
(29) |
| |
பிரிவுழிமகிழ்ச்சி செல்லுங்கிழத்தி செலவுகண்டுளத்தொடு சொல்லல் |
| |
| |
உடையோர் சிறிதொரு கைதூக்கி வீசி யொருகையினைப் புடையோ டரிக்க ணிலனோக்கிச் சிற்றொலிப் பூணுடனே சடையோர் திருவெங்கை வெற்பினம் மாவி தனிநெஞ்சமே நடையோ திமங்கள்கண் டென்னே பறக்க நடக்கின்றதே.
|
(30) |
| |
| பாகனொடுசொல்லல் |
| |
| |
பொன்னங் கிரிநிகர் திண்டேர் செலுத்தும் புகழ்வலவா மின்னஞ் சடையர் திருவெங்கை வாணர்தம் வெள்ளருவித் தென்னஞ் சிலம்பி லிடைமிடித் தார்தமைத் தேடியெதிர் அன்னம் பிடியென வேநடந் தேகுநம் மாயிழையே.
|
(31) |
| |
பிரிவுழிக்கலங்கல் ஆயவெள்ளம்வழிபடக்கண்டிது மாயமோவென்றல் |
| |
| |
ஆயவெள் ளத்தி னடுவே யிருக்கு மரசவன்னம் பாயவெள் ளத்தமு துற்றாங் கெனக்ககப் பட்டதுதான் மேயவெள் ளச்சடை யம்மான் றிருவெங்கை வெற்பிலொரு மாயவெள் ளக்கன வோவறி யேனெஞ்ச மாழ்குவதே.
|
(32) |
| |
|
| |
28. சீறா-சினவாத. கூறு-பாகம். பழனம்-வயல்; அது சார்ந்த இடமும் கொள்க. 29. பழிமாற்றிய-பழியை நீக்கிய. சுழி-நீர்ச்சுழி. உந்தி-கொப்பூழ். வழிமாற்றம்-தாழ்ந்தசொல். பிறழ்மோ-தவறுமோ? பிறழாது-தவறாது. மொழிமாற்றுப் பொருள்கோள்-எண்வகைப் பொருள் கோளில் ஒன்று ; அது அவ்விடங்கட்கியைய மொழிகளை மாற்றிப் பொருள் கொள்வது. வழி-முறைமை. 30. உடை-ஆடை. அரி-செவ்வரி. பூண்-அணிகலம். சடையோர்-சடையை உடையவர். ஆவி-உயிரைப் போன்ற தலைமகள். ஓதிமங்கள்-அன்னங்கள். புடை-பக்கம். வெற்பு-மிக உயர்ந்த மலை. 31. வலவன்-தேர்ப்பாகன். இடைமிடித்தார்-இடை வறுமைப்பட்டவர் :அஃதாவது இடை சிறுத்தவர்கள். அன்னம் பிடி-அன்னமும் பெண் யானையும்; உணவு ஒருபிடி. இடைமிடித்தார் அன்னம்பிடி-என்பன சிலேடை. 32. ஆயவெள்ளம்-தோழியர் கூட்டம். வள்ளம்-கிண்ணம். பாயவெள்ளம்-பயவெள்ளம்; ஈண்டுப் பாற்கடல்.
|
|
|
|