| 9. திருவெங்கைக்கோவை |
|
| வாயில்பெற்றுய்தல் |
| |
| |
சேவை யுகைப்பவர் வெங்கைபு ரேசர் சிலம்பின்மயல் நோவை யொழிப்ப மருந்துகண் டோமினி நோவனெஞ்சே பூவை யுருத்த மொழியார் மழைக்கட் பொறிவண்டுதாம் பாவை யொருத்தி முகாம்புயத் தேசென்று பாய்கின்றவே.
|
(33) |
| |
| பண்புபாராட்டல் |
| |
| |
நிதிமுன் மிடியர் மனம்போ லவாவி நிகரில்வெங்கைப் பதிமுன் புகுமுது குன்றுடை யார்பதம் பண்டரைத்த மதிமுன் மரையு மரைநா யகன்முன் மதியுங்கண்டோர் விதிமுன் கொணரு மிவர்முகம் போல வியக்கிலரே.
|
(34) |
| |
| பயந்தோர்ப்பழிச்சல் |
| |
| |
செந்தா மரையு மரிமார்பு மென்னத் திருமகடான் நந்தா மனையிடை யின்றிருந் தாங்கெந்த நாளுமுற அந்தாழ் சடையவர் வெங்கையி லேநம தாவிநிற்ப வந்தா ரமுதிகழ் தந்தாரைத் தந்தவர் வாழியவே.
|
(35) |
| |
| கண்படைபெறாதுகங்குனோதல் |
| |
| |
அரவாம் பணியினர் வெங்கைபு ரேச ரணியழகின் வரவாங் கதிரென் றுறுமோ வுடுமொக்குள் வந்தெழவே விரவாம் புயற்கர வோடவிர் மாமதி வெள்வளைசேர் இரவாங் கடலில் விழுந்தமிழ் வேனை யெடுப்பதற்கே.
|
(36) |
| |
|
| |
33. சே-காளை. நோவல்-வருந்தாதே. பூவை-நாகணவாய்ப் புள். உருத்த-வென்ற. சிலம்பு-மலை. இது எதிரொலித்தலால் இப்பெயர் பெற்றது. முகாம்புயம்-முகம் அம்புயம்; முகமாகிய தாமரை. பொறி-அறிவு. 34. நிதி-செல்வம். மிடி-வறுமை. மதி-ஈண்டு முழுத் திங்கள். மரை-முதற்குறை. தாமரையை மலர்த்துதலால் கதிரவனை மரை நாயகன் என்றார். தாமரையும் மதியும் ஒளியிழத்தலைக் கண்டவர் உவமியார் : காணாதவரே முகத்துக்கு உவமிப்பரென்பது. 35. அரிமார்பு-திருமாலின் மார்பு. நந்தாமனை-அழிவற்ற இல்லத்தில். எந்நாளும் பொருந்த வாழிய என்று கூட்டுக. 36. அரவாம் பணியினர்-பாம்பாகிய அணிகலன்களையுடையவர். உடு-விண்மீன். மொக்குள்-குமிழிகள். புயல் கரவோடு-முகிலாகிய முதலையோடு. வெள்வளை-வெள்ளிய சங்கம். வரவாங்கதிர்-வருதலையுடைய கதிரவன்.
|
|
|
|