முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
ஆயத்துய்த்தல்
வானோக்கி நிற்கும்பைங் கூழ்போ லவுமொரு மன்னவன்செங்
கோனோக்கி நிற்குங் குடிபோல வுந்தடங் கோட்டிமையத்
தேனோக்கி நிற்கு மெழிலுடை யான்வெங்கைச் செல்வியுனைத்
தானோக்கி நிற்குநல் லாயத்து ளேசென்று சார்ந்தருளே.
(41)
பாங்கற்கூட்டம்
தலைவன் பாங்கனைச்சார்தல்
கன்னியுந் தானுமொன் றானோன் றிருவெங்கைக் கண்ணுதல்போல்
வன்னியுங் காற்றுங் கலந்தே றியவெம் மதனைவெல்லச்
சென்னியுஞ் சேகர மும்போ னமக்குச் சிறந்தநண்பன்
மன்னியிங் கோர்துணை யாயினல் லாமல் வலியில்லையே.
(42)
பாங்கன்றலைவனை யுற்றதுவினாதல்
இலங்கா புரிமன்னன் றோளிற வூன்றிய வீசர்வெங்கை
உலங்கா தலிக்குந்திண் டோளுர வாகட லூர்ந்திடினும்
விலங்கா மறலி யொருகோடி தூதொடு மேல்வரினுங்
கலங்கா வுளமுங் கலங்கிநின் றாயென்ன காரணமே.
(43)

41. வான்-இடவாகு பெயர். தடங்கோடு-பெரிய சிகரம். இமயத்தேன் என்றது உமாதேவியை. இவள்இறைவற்கு மலைத்தேன்போல் இனிமை பயத்தலால் உவமையாகு பெயர். 42. வன்னி-கிளி. மதனை-காமனை. ஒன்று-ஓருரு. கண்ணுதல்-நெற்றிக் கண்ணையுடையவன். 43. உலம் காதலிக்கும்-திரள்கல்லானது விரும்பும். உரவா-அறிவுடையோனே. விலங்கா-விலக்கப்படாத.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்