| 9. திருவெங்கைக்கோவை |
|
| ஆயத்துய்த்தல் |
| |
| |
வானோக்கி நிற்கும்பைங் கூழ்போ லவுமொரு மன்னவன்செங் கோனோக்கி நிற்குங் குடிபோல வுந்தடங் கோட்டிமையத் தேனோக்கி நிற்கு மெழிலுடை யான்வெங்கைச் செல்வியுனைத் தானோக்கி நிற்குநல் லாயத்து ளேசென்று சார்ந்தருளே.
|
(41) |
| |
பாங்கற்கூட்டம் தலைவன் பாங்கனைச்சார்தல் |
| |
| |
கன்னியுந் தானுமொன் றானோன் றிருவெங்கைக் கண்ணுதல்போல் வன்னியுங் காற்றுங் கலந்தே றியவெம் மதனைவெல்லச் சென்னியுஞ் சேகர மும்போ னமக்குச் சிறந்தநண்பன் மன்னியிங் கோர்துணை யாயினல் லாமல் வலியில்லையே.
|
(42) |
| |
| பாங்கன்றலைவனை யுற்றதுவினாதல் |
| |
| |
இலங்கா புரிமன்னன் றோளிற வூன்றிய வீசர்வெங்கை உலங்கா தலிக்குந்திண் டோளுர வாகட லூர்ந்திடினும் விலங்கா மறலி யொருகோடி தூதொடு மேல்வரினுங் கலங்கா வுளமுங் கலங்கிநின் றாயென்ன காரணமே.
|
(43) |
| |
|
| |
41. வான்-இடவாகு பெயர். தடங்கோடு-பெரிய சிகரம். இமயத்தேன் என்றது உமாதேவியை. இவள்இறைவற்கு மலைத்தேன்போல் இனிமை பயத்தலால் உவமையாகு பெயர். 42. வன்னி-கிளி. மதனை-காமனை. ஒன்று-ஓருரு. கண்ணுதல்-நெற்றிக் கண்ணையுடையவன். 43. உலம் காதலிக்கும்-திரள்கல்லானது விரும்பும். உரவா-அறிவுடையோனே. விலங்கா-விலக்கப்படாத.
|
|
|
|