முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
கலவியின்மகிழ்தல்
துதிவாய் தொறுங்கொளு மென்மலர்ப் பூம்பொழில் சூழ்ந்தவெங்கைப்
பதிவாய் வரையிள மானோ டமர்ந்த பரனருளாற்
றிதிவாய் மதியமிர் தம்போ லலாமற் சிறந்தமுக
மதிவா யமிர்தமுண் டோம்வந்து கூடவிம் மங்கையரே.
(62)
புகழ்தல்
சங்கந் துறந்தன்ன மில்லாம லேயொரு தாளினின்று
பொங்கம் புனலிற் றவம்புரிந் தாலும் புரைகுவிரோ
அங்கம் பலவணிந் தார்வெங்கை வாண ரணிவரைமேல்
இங்கம் புயமுகை காளிந்த மாத ரிளமுலைக்கே.
(63)
பாங்கியொடுவருகெனப்பகர்தல்
பங்கே ருகத்திற் கடுத்தசெங் காவிப் பனிமலர்போல்
நுங்கே ளெனுமுயிர்ப் பாங்கியொ டேமறை நூன்முகத்திற்
சங்கேத மாம்பெயர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
இங்கே வருகவென் னெஞ்சா லயத்தி லிருப்பவரே.
(64)
பாங்கிற்கூட்டல்
கார்கண்ட மஞ்ஞையுஞ் செந்தே னிரம்பக் கடைதிறக்குந்
தார்கண்ட வண்டுந் திருவெங்கை நாயகர் தாண்மலரின்
சீர்கண்ட வன்பரும் போலேநிற் கண்டு சிறக்குமுளப்
போர்கண்ட வேற்கண் மடவாரை மேவுக பூங்கொடியே.
(65)
பாங்கிமதியுடன்பாடு
தோற்றத்தாலாராய்தல்
எனையா டியபதந் தாள்வோன் றிருவெங்கை யேந்திழைநீ
சினையா டியமணிப் பொன்னூச லாடிச் செழுங்குவளைச்
சுனையாடி வண்டல் விளையாடி முத்தந் துவன்றியவம்
மனையாடி வந்தனை யோதிரு மேனி வருந்தியதே.
(66)

62.2, துதி-முதனிலைத் தொழிற்பெயர். வரையிளமான்-இமயமலையில் தோன்றிய உமாதேவி. பரன்-மேலானவன். திதி-வளர்ச்சி. 63. சங்கம்-கூட்டம், சங்குகள். அன்னம்-சோறு, அன்னப் பறவைகள். புரைகுவிரோ-ஒப்பாவீரோ? அங்கம்-எலும்பு. அம்புயமுகைகள்-தாமரை மொட்டுகள். 64. சங்கேதம் ஆம்பெயர்-சங்கேதமாகிய பெயரையுடைய. நெஞ்சாலம்-உள்ளக்கோயில். கேதமாகிய பெயரையுடைய. நெஞ்சாலயம்-உள்ளக்கோயில். 65. கார்கண்ட-முகிலைக்கண்ட. தார்கண்ட-பூவரும்பைக்கண்ட. கடை திறக்கும்-வாயிலைத் திறக்கிற; ஈண்டு இதழ்க்கதவு. தார்-மலரும் பருவத்துப் பேரரும்பு. சிறத்தல்-மகிழ்தல். 66. சினையாடிய-மரக்கிளையிற் கட்டிய. முத்தம் துவன்றிய-முத்துக்கள் நெருங்கப் பதித்த. வண்டல்-மகளிர் விளையாட்டில் ஒன்று.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்