முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
நடுங்கநாட்டம்
எதிராக் கவினுமை பங்காளர் வெங்கை யிறைவர்சடை
முதிராப் பிறையைந் தலைநாக மீன்ற முழுமணியின்
கதிராற் சிவந்தது போற்சேந்த கோட்டுக் களிற்றைமலர்
உதிராக் கொடியனை யாயின்று நான்கண் டுடைந்தனனே.
(71)
பெட்டவாயில்பெற்றிரவுவலியுறுத்தல்
அருவா யுருவமு மாம்வெங்கை வாண ரரும்பதத்தைக்
குருவா லடைபவர் போலுயிர்ப் பாங்கியைக் கொண்டுமெல்லப்
பெருவா ரறநிமிர்ந் தோர்நூன் மருங்குற் பெரும்பழியை
வெருவா தெழுமுலைப் பெண்ணா ரமுதத்தை மேவுதுமே.
(72)
ஊர்வினாதல்
வலைநடு வந்த விளங்கலை போனும் மணிவடந்தாழ்
முலைநடு வென்ன விடமற வேவந்து முட்டுமிரு
மலைநடு வந்துநொந் தேனுரை யீர்நும் வளம்பதியா
தலைநடு வந்தனஞ் சுண்டபி ரான்வெங்கை யன்னவரே.
(73)
பெயர்வினாதல்
ஊரான திங்குரை யீரா யினுமென் னுளங்குளிரச்
சீரார் திருவெங்கை மாநக ரார்தந் திருப்பெயர்போற்
பாரார் பருவங்கண் டேமறை யாகப் பகர்வதன்றே
பேரா யினுமுரை யீர்பிறை வாணுதற் பேதையரே.
(74)
கெடுதிவினாதல்
பைங்காஞ் சனவரை வில்லாளர் வெங்கைப் பனிவரைமேற்
செங்காந்த ளன்னமென் கைம்மட வீர்செங் குருதிபொங்க
வங்காந்த தன்பகு வாய்போல வேல்பட் டழுந்துபுண்ணோ
டிங்காம்பு னத்தயல் வந்ததுண் டோநல் லிளங்களிறே.
(75)

71. எதிரா-நிகரற்ற. முதிராப்பிறை-இளம்பிறை. சேந்த-சிவந்த. கோடு-கொம்பு. 72. அருஆய்-உருவம் அற்று. மருங்குல்-இடை. வெருவாது-அஞ்சாமல். உயிர்ப்பாங்கி-உயிர் போன்ற பாங்கி. 73. இளங்கலை-இளமான். வந்து முட்டும்-வந்து நெருங்கின. 74. பாரார்-உலகத்தார். பேதையர்-பருவங்குறியாது மாதர் என்னுந் துணையாய் நின்றது. 75. பைங்காஞ்சனவரை-பசிய பொன்மலை. அங்காந்த-பிளந்த. பகுவாய்-திறந்த வாய்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்