1. சோணசைலமாலை |
|
|
சுடரிலை நெடுவேற் கருங்கணார்க் குருகித் துயர்ந்துநின் றலமரு மனநின் நடநவில் சரண பங்கய நினைந்து நைந்துநைந் துருகுநா ளுளதோ மடலவிழ் மரைமாட் டெதினென வருகு மதியுறக் கார்த்திகை விளக்குத் தடமுடி யிலங்க வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(5) |
|
|
அருங்கவி வாத வூரனே முதலோ ரன்பிலே மென்றது வேண்டி இரங்குதல் பொய்ம்மை யன்பிலே னெனயா னியம்பலே மெய்யெனக் கருளாய் கருங்கட முமிழு மீர்ங்கவுட் பனைக்கைக் கரியுரிக் கஞ்சுகங் கடுப்பத் தரங்கமுண் டெழுகார் முகில்பயில் சோண சைலனே கைலைநா யகனே.
|
(6) |
|
|
புரத்துறு மவுணக் குழாமும்வண் டிசைகூர் பூங்கணை மதனுமுன் பெறுநின் சிரித்த வண் ணகையு நுதல்விழி நோக்குஞ் சிறியனே னிருண்மலம் பெறுமோ கருத்தினுங் கருத வரியநுண் ணியனென் கடனற வுலகெலாங் காண்பான் தரித்ததி தூல வடிவறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(7) |
|
|
|
5. துயர்ந்து-வருந்தி. மரை-தாமரை; முதற்குறை. எகின்-அன்னம். கார்த்திகைத் தீபம் செந்நிறம் வாய்ந்து ஓங்கியும், பிறை வெண்ணிறம் வாய்ந்து கூனியுமிருத்தலின், அவற்றைச் செந்தாமரை மலரும் அன்னமுமாக உருவகித்தார். சுடரிலைநெடுவேல்-இலை வடிவாகச் செய்யப்பட்டு ஒளிவிடுகிற நீண்டவேல். அலமரும்-சுழலும். நடம்நவில்-கூத்தியற்றுதலைச் செய்கிற. 6. முகில் கஞ்சுகங்கடுப்பப் பயில் என இயையும், கஞ்சுகம்-சட்டை. தரங்கம்-கடல்; ஆகு பெயர். அன்புடையாராயிருக்கவும் இல்லையென்று பொய் கூறிய வாதவூரற்கு அருளினமை அடாது. மெய் கூறு மென்றனக் கருளுதலே கடன். கடம்-மதநீர். ஈர்ங்கவுள்-குளிர்ந்த கன்னம், கடுப்ப-ஒப்ப. பனைக்கை-பனை மரத்தைப்போன்றகை. முகில் பயில்-முகில்கள்படிகின்ற. 7. கடன்-முறைமை. புரம்-முப்புரம். இருண்மலம்-ஆணவமலம். தூலவடிவு-பெரிய மலை வடிவம். நினது வெண்ணகையையும், நுதல் விழி நாட்டத்தையும் எனது ஆணவ மலம்பெற அருளுவையோ?
|
|
|
|