1. சோணசைலமாலை |
|
|
ஆர்த்தெழு திரைகள் சுருண்டெறி கடனஞ் சமுதுசெய் பெரும்புகழ்த் தனிமை தீர்த்திட வுளங்கொண் டவலனேன் றனைநின் றிருவடிக் கண்பனாக் கிலையே கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து கண்டவ ரகத்திரு ளனைத்தும் சாய்த்துநின் றெழுந்து விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(8) |
|
|
தொடையுடைத் திரடோ ணமன்புறத் துடலந் தொலைக்குமு னகத்துட றொலைத்துத் தடையறத் திகழ்பே ரறிவுரு வாகத் தமியனேற் கருளுநா ளுளதோ புடையினிற் கரிக்கோ டிளம்பிறை புரையப் பொங்குசோ தியங்கொடி விரித்த சடையெனப் படர்ந்து கிடந்தொளிர் சோண சைலனே கைலைநா யகனே.
|
(9) |
|
|
கண்புன றுளிப்ப வழற்படு மிழுதிற் கரைந்துகு நெஞ்சினின் றனையே பெண்பயி லுருவ மொடுநினைந் தெனது பெண்மய லகற்றுநா ளுளதோ வண்புனல் வேந்த னார்கலிக் குடத்து மணிமுகிற் கலயத்தின் முகந்து தண்புன லாட்ட வாடுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(10) |
|
|
|
8. ஆர்த்தெழு திரைகள்-ஆரவாரித்தெழும்அலைகள். அவலனேன்-வீணானவன். அடியேன் நஞ்சினும் கொடியேனாகையால் நீ ஆளவில்லையென்பது கருத்து 9. தொடை-மாலை. அகத்துடல்-அஞ்ஞானம். அறிவுருவாக-வீடுபேற்றையடைய. புடை-பக்கம். கரிக்கோடு-யானைத்தந்தம். புரைய-ஒப்பாகவிளங்க. சோதியங்கொடி-இரவில் ஒளிவீசுதலையுடைய ஒருவகைக் கொடி 10. புனல்-நீர். அழல்-தீ. இழுது-வெண்ணெய். ஆர்கலி-கடல். வருணன் முகிற்குடத்தால் மொண்டு நீராட்டினாலன்றி நீ நீராடுதல் அருமை என்பது குறிப்பு.
|
|
|
|