முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
வேலையந் துகில்சூழ் மலர்தலை யுலகின்
      மெய்யினைப் பொய்யெனு மவர்க்கே
ஏலவந் தருள்வ தன்றிமெய் யினைமெய்
      யெனுமெனக் கருள்புரிந் திடாயோ
காலநன் குணர்ந்து சினகரம் புகுந்து
      காண்பரி தெனாதுல கனைத்துஞ்
சாலநின் றுழியே கண்டிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(11)
மயலினா லழுந்தும் பிறவியா மளற்றை
      வளர்தரு நின்பெருங் கருணை
வெயிலினா லுலர்த்தி யெனதுளக் கமலம்
      விரிக்குமொண் பரிதிநீ யலையோ
பயிலுமா லயமோர் சைலமோர் சைலம்
      பகைப்புல முருக்குகார் முகமோர்
சைலமா துலனா மெனக்கொளுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(12)
புலம்பரி துயரங் கழன்றுநின் கழற்கால்
      புந்தியஞ் சினகரத் திருத்தி
நலம்புரி மனிதர் பேரவை தமியே
      னணுகுவா னருளுநா ளுளதோ
வலம்புரி மனிதர் கடலென வொலித்து
      வளைவுற நடுவண்மந் தரம்போல்
தலம்புரி தவத்தி னின்றொளிர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(13)

11. வேலையந் துகில்-கடலாடை, சினகரம்-கோவில். மெய்-உடல். ஏல-பொருந்த. சால-மிக. நின்றுழியே-நின்றவிடத்தே. 12. மயல்-மயக்கம். ஆலயம் கைலை; கார்முகம்-மேரு; மாதுலன் இமயம் என்க. அளறு-சேறு. பரிதி-கதிரவன். பகைப்புலம்-பகைவர் ஊர். உருக்கு-அழிக்கும். மாதுலன்-மாமன். 13. புலம்-ஐம்பொறி. கழன்று-நீங்கி. நலம்புரி மனிதர்-வீடுபேற்று விருப்பினையுடையோர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்