1. சோணசைலமாலை |
|
|
நீரினி லெழுமொக் குளினழி யுடம்பு நிலையென நிலைக்குமா னந்த வாரிதி படிய வறிந்திடா துழலு மடைமையே னுய்யுநா ளுளதோ ஏரியல் பதமுன் றேடுமக் கேழ லின்றுநா டியகிளைத் திடல்போற் சாரலி னேன மருப்புழுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(14) |
|
|
கருத்திடை நினது கருணைமா மேனி கண்டெழுத் தைந்துநா வியம்பச் சிரத்தினி லமைத்த கரத்தொடு நினையான் தினம்வலம் புரியுமா றருளாய் வரத்திரு முடியின் மதிதிரு முடியின் வனைந்துகந் தரத்தினி லிருள்கந் தரத்தினி லிருத்தி விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(15) |
|
|
பாரெலா மிகழு மிகழ்ச்சியும் புகழ்ச்சிப் பயனென வுணர்ந்துநா டொறுமா ரூரனா ரவையி னிகழ்ந்தசொற் றுதியி னுவக்குநின் பதந்தொழ வருளாய் ஏருலா மண்டச் சுவர்மதின் மிசைப்பா லிலங்குறு மண்டகோ ளகையாச் சாருமா லயத்தி லிலிங்கமாஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(16) |
|
|
|
14. வாரிதி-கடல். கேழல்-பன்றி. மொக்குள்-நீர்க்குமிழி. நிலைக்கும்-என்றும் நிலைபெற்றுவிளங்கும். கிளைத்திடல்-தோண்டுதல். ஏனம்-பன்றி. மருப்பு-கொம்பு. 15. வரம்-மேன்மை. வனைந்து-சூடி. கந்தரம்-குகை, கழுத்து. 16. பயன்-பொருள். சிவபெருமானுக்கு இகழ்ச்சி மொழியும் புகழ்ச்சிப் பொருளதென்பது கருத்து. இதனை இவ்வாசிரியரருளிய சிவநாம மகிமையின் அ-ஆவது பாடலினுமுணர்க. உணர்ந்து-நாடொறும் தொழ என இயையும், மிசைப் பால்-மேற்பரப்பு. கோளகை-மேற்கடாகம்.
|
|
|
|