முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
குறுந்தொடிவாழு மூர்நோக்கி மதிமயங்கல்
அறத்தா றுடையர் நுகர்பெரும் போக மறமறியா
மறத்தா றுடையர் விரும்புதல் போலும் வளர்சடையின்
புறத்தா றுடையர் திருவெங்கை வாணர் பொருப்படைந்த
குறத்தா றுடையர் மடமாதை மேவக் குறிப்பதுவே.
(165)
இரவுக்குறி
இறையோ னிருட்குறிவேண்டல்
பொருந்தா ரரணம் பொடித்தோர் பவப்பிணி போக்குதற்கு
மருந்தா மிறைவர் திருவெங்கை வாணர் வரையனையீர்
திருந்தார் கலியிற் புகுந்துநன் மீன்வரச் செய்துமக்கு
விருந்தாக வைத்தகன் றானளி யேனையவ் வெய்யவனே.
(166)
பாங்கிநெறியின் தருமைகூறல்
அங்க முழுவணி யானோன்றென் வெங்கை யரனருண்மா
தங்க முழுமத யானையன் றாடகற் சாடுமொரு
சிங்க முழுவரி யன்றென வேழமுஞ் சீயமுஞ்சேர்
துங்க முழுவன மெவ்வா றிருள்வரச் சொல்லுவதே.
(167)
இறையோனெறியின தெளிமைகூறல்
பங்கந் தனக்கிலன் வெங்கையி லேநும் பணைமுலைமா
தங்கந் தனக்குமம் மாதங்க பாரந் தரிக்குமிடைச்
சிங்கந் தனக்குத் தளர்வதல் லாமற் சினவிலங்கின்
சங்கந் தனக்கொரு நானோ தளர்குவன் றாழ்குழலே,
(168)

165. அறத்தாறு-அறநெறி. நுகர்தல்-அனுபவித்தல். பெரும்போகம்-பேரின்பம். உடையர்-பாவிகள். குறத்தாறு-குறவர் மரபு. 166. பொருந்தார்-பகைவர். அரணம்-மதில். ஆர்கலி-கடல். மீன்-உடுக்கள். 167. மாதங்கம்-யானை. ஆடகன்-இரணியன். முழு அரி-முழுச் சிங்கம். துங்கம்-உயர்ச்சி. முழுவனம்-பெருங்காடு. 168. எக்காலத்தும் அழிவற்றவனாகையால் இறைவனைப் பங்கந் தனக்கிலன் என்றார். பணைத்தல்-பருத்தல். சங்கம்-கூட்டம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்