முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
நேராதிறைவி நெஞ்சொடுகிளத்தல்
ஒலியா லசையச் சருகெழத் தோகை யுடன்குதிப்பப்
புலியா வெனவெழக் குஞ்சர மோடப் புளிநரெல்லாம்
மெலியா விரையும் வனத்தே யிறைதிரு வெங்கைவெற்பில்
மலியா ரிருள்வர நெஞ்சமெவ் வாறு வலிப்பதுவே.
(173)
நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல்
மின்னோடு வந்த விரிசடை யோன்றிரு வெங்கைவெற்பர்
மன்னோடு நீயிருள் வந்தே கெனச்சொன் மடந்தைநல்லாய்
என்னோடு கூடி யிருப்பது போல விருந்துமனம்
உன்னோடு கூடி னினியேது நானிங் குரைப்பதுவே.
(174)
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்குரைத்தல்
கொலையைக் குறித்த விலைவே லவநின் குறிப்பிசைய
முலையைப் புணர்மென் கொடியிடை யாடன் முரணுமனச்
சிலையைக் கரைத்துவந் தேனொரு நான்வெங்கைச் செல்வரைப்போல்
மலையைக் குழைக்கவும் வல்லே னினியிந்த மாநிலத்தே,
(175)
குறியிடைநிறீஇத் தாய்துயிலறிதல்
விந்தா சலமுனி மாதவன் போற்றரன் வெங்கைவெற்பில்
சந்தா டவிகண் முறித்தெறி வேலொடு தண்புனத்தில்
வந்தா குலநமக் காக்கிய வாரணம் வந்துற்றதோ
நந்தா வனத்திற் பறவையெல் லாமு நரல்கின்றவே,
(176)

173. குஞ்சரம்-யானை. தோகை-சினையாகுபெயர். மலியார் இருள்-மிகப்பெரிய இருள். வலிப்பது-உறுதி கொண்டிருப்பது. 174. மின்னோடுவந்த-மின்னோடு கூடிவிளங்குகிற. மன்னோடு-தலைவனோடு: 175. ஒருநான்-ஒப்பற்ற நான். முரணும்-மாறுபட்ட-மனச்சிலை-மனமாகிய கல். 176. விந்தாசலம்-விந்தமலை. முனி-சினந்த. சந்தாடவிகள்-சந்தனக்காடுகள். ஆகுலம்-வருத்தம். நரலல்-ஒலித்தல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்