| 9. திருவெங்கைக்கோவை |
|
| இறைவியையெய்திப் பாங்கிகையுறைகாட்டல் |
| |
| |
முட்டுப் படாத திருவாளன் வெங்கை முளரிமுகை நட்டுப் படாத விளமுலை யாயுன் னகையுடனே மட்டுப் படாம லிகலுந் தளவின்று மட்டுப்பட்டுக் கட்டுப் படாமலென் கைக்கேவந் துற்றது கண்டருளே.
|
(187) |
| |
| இற்கொண்டேகல் |
| |
| |
சூடுந் துளப மணிநீல வெற்புந் தொடர்ந்துமுனம் நாடுந் திருவடி யெம்மான் றிருவெங்கை நாடனையாய் ஆடுங் கலாப மயில்போ லுறங்குநம் மன்னையினாற் றேடும் பொருளல்ல மோசெல்லு வோநந் திருமனைக்கே.
|
(188) |
| |
| பிற்சென்றிறைவன் வரவுவிலக்கல் |
| |
| |
தம்மேற் பணிபுனை வெங்கைபு ரேசரைச் சார்கிலர்போற் கைம்மேற் பொருடெரி யாவிருள் வாய்வெங் கரியுடனே தென்மேற் புலிதிரி யுங்காட்டி னீயிச் சிறுவழிவந் தெம்மேற் பழிசுமத் தாதகல் வாயெம் மிறையவனே.
|
(189) |
| |
| பெருமகன்மயங்கல் |
| |
| |
ஆய்வா ரளவி னளவாகும் வெங்கை யமலர்வெற்பிற் றேய்வா னுடங்கிடை யாயறிந் தாரைச் செலவிடுப்போர் போய்வென் பாரிவ் வுலகினிற் போவென வேமுடித்து நீவாவென் றாயிலை கண்ணோட்ட மில்லைகொ னின்றனக்கே.
|
(190) |
| |
|
| |
187. முட்டுப்படாத-குறையுண்டாகாத. திருவாளன்-செல்வன். முளரி-தாமரை. நட்டல்-நட்புச் செய்தல். நகை-பல். மட்டு-அளவு. தளவு-முல்லை. மட்டு-தேன். 188. துளபம்-துளசிமாலை. நாடுதல்-தேடுதல். கலாபம்-தோகை. 189. சார்கிலர் போல் வந்து என இயையும். தெவ்-போர். பழி-பழிச்சொல். 190. ஆய்வார் என்றது பக்குவிகளை. அமலர்-தூயவர். செலவிடுத்தல்-அனுப்புதல்.
|
|
|
|