முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
என்பிழைப்பன்றென் றிறைவி நோதல்
அஞ்சா மதற்றெறும் வெங்கைபு ரேச ரணிமிடற்றில்
நஞ்சா மிருளிற் குறிபிழை யாதொரு நான்குறித்துத்
துஞ்சா திருந்துந்துஞ் சுற்றா ளெனவவர் தூற்றப்பட்டேன்
எஞ்சா வமுதனை யாயினி நானிதற் கென்செய்வதே.
(204)
தாய் துஞ்சாமை
கயிற்றா னிகழர வம்போற் சகந்தனிற் கற்பனையாக்
குயிற்றா நிகழிறை வெங்கையி லேயெழுங் கூன்பிறையோர்
எயிற்றா னிகழு மிளம்பேதை யாமிவ் விரவுவந்த
துயிற்றா வனைதனை வெங்கால தூதர் துயிற்றுகவே.
(205)
நாய் துஞ்சாமை
சுளைவாய் மடைதிறக் கும்பல வான்வயற் றோன்றுசெந்நெல்
விளைவாய் மலியுந் திருவெங்கை வாணர்தம் வெற்பிடைமா
தளைவாய் மடமயி லேதனி வேழந் தனையொருபுன்
வளைவாய் ஞமலி குரைத்திங் குறாமன் மறித்ததுவே.
(206)
ஊர் துஞ்சாமை
நீர்துஞ்சுஞ் செஞ்சடை யார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பில்
வார்துஞ்சு மென்முலைக் கோமள மேவந்து மால்வரைமேற்
கார்துஞ்சு மாவின மெல்லாமுன் றுஞ்சக் கடலுந்துஞ்ச
ஊர்துஞ்சி லாததென் னோவிது நான்செய்த வூழ்வினையே.
(207)
காவலர் கடுகுதல்
தேவாதி தேவர் திருவெங்கை வாணர் சிலம்பர்நமை
மேவாத வண்ணங் கதிர்வேன் மருட்டும் விழிமடவாய்
கூவா மறுகிற் றிரிகா வலர்கையிற் கொட்டுபறை
வாவா வெனநெய்த லம்பறை கூவுநம் வாய்தலுக்கே.
(208)

204.04. தெறும்-வென்ற. துஞ்சுற்றாள்-தூங்கினாள். தேவர்கள் முதலானோரைக் காத்தமை நோக்கி ‘அணிமிடறு’ என்றார். எஞ்சாவமுது-குறையாத அமுதம். 205.05. கயீறு-பழுதை. அரவம்-பாம்பு. கற்பனை-இல்லதை உள்ளதுபோற் கற்பித்தல். குயிற்றல்-செய்தல். எயிறு-பல். 206.06. மாதளைவாய்-மாதுளங்கனிபோலும் வாய். மாதளை- மாதுளம் பூவுமாம். ஞமலி-நாய். மறித்தல்-தடுத்தல். 207.07. ஊர்-ஊரிலுள்ளாரை யுணர்த்தலால் ஆகபெயர். வார்-கச்சு. வரை-மூங்கில். கார்-முகில். மா-விலங்கு. வார் துஞ்சு மென்முலைக் கோமளம் என்றது பாங்கியை. 208.08. தேவாதி தேவர்-தேவர்களுக்கெல்லாம் முதல் தேவர். சிலம்பர்-வெற்பர். மேவல்-கூடல். மருட்டல்-வெருட்டல். நெய்தற்பறை-சாப்பறை. அறைகூவுதல்-வலிந்தழைத்தல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்