| 9. திருவெங்கைக்கோவை |
|
| அலர்பார்த்துற்ற வச்சக்கிளவி |
| |
| |
கலரா லறிவரி யார்வெங்கை வாணர் கனகவெற்பிற் பலரா லணியும் புகழார் பிறப்பொன்றிற் பாவிமதன் மலரால் வருந்துயர் நீக்குவ ராயினு மண்ணுளர்வாய் அலரால் வருந்துயர் நீக்குகிற் பாரை யறிந்திலமே.
|
(222) |
| |
| ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி |
| |
| |
ஒருகோடு தம்மிற் குறைந்தநல் வாரண மொன்றுமன்றி இருகோடு வந்து மிகுங்களி றேனு மிகன்மதமா அருகோடு வெவ்வத ரென்றாலும் வெங்கை யமலர்தரும் முருகோ டுறழும் வடிவா ரிடைமன முந்துறுமே.
|
(223) |
| |
| காமமிக்க கழிபடர்கிளவி |
| |
| |
மாமாய னுந்தொழும் வெங்கைபு ரேசர் மணிவரைமேற் பாமா முனிவன் மலயா நிலமொரு பாலசைய வேமாயர் வேய்ங்குழ லாலூத மேனி விறகிற்பற்றுங் காமா னலமவி யாகட லேழுங் கவிப்பினுமே.
|
(224) |
| |
| தன்னுட்கையா றெய்திடுகிளவி |
| |
| |
வம்புற் றனைவெண் மதியா லொடுங்கினை வண்டிழந்தாய் அம்புற் றனைமிகு கண்முத் துகுத்தனை யம்புயமே நம்புற் றரவணி யெம்மான் றிருவெங்கை நாட்டிறையை வெம்புற் றனையெனைப் போலென்ப தின்று வெளிப்பட்டதே.
|
(225) |
| |
|
| |
222.22. கலர்-கீழ்மக்கள். மண்ணுளர்-மண்ணுலகில் உள்ளவர். வாயலர்-பழிச்சொல். 223.23. வெம் அதர்-கொடிய வழி. முருகோடு உறழும்- முருகரை நிகர்த்த. ஒருகோடு குறைந்த வாரணம்-ஆனைமுகக் கடவுள். 224.24. பாம்-எங்கும் பரவும், பாவும் என்பது பாம் என இடைக் குறையாயிற்று. மலயாநிலம்-தென்றற்காற்று. வேம்-வெந்த; வேவும் என்பது வேம் எனக் குறைந்து நின்றது. காமாநலம்-காமத்தீ. 225.25. வம்பு-தீச்சொல்; மணம். வெண்மதி-வெள்ளறிவு; வெள்ளிய திங்கள். வண்டு-வளையல்; வண்டுகள். இருகண்முத்து-இரு கண்ணீர். வெம்புறல்-விரும்பல்.
|
|
|
|