| 9. திருவெங்கைக்கோவை |
|
| நெறி விலக்குவித்தல் |
| |
| |
நீரலை வேணியர் வெங்கையில் வாழு நெடுந்தகையைச் சீரலை வாய்வருஞ் செவ்வேண் முருகனுஞ் சேறலருஞ் சாரலை மேவு மொருபெருங் காட்டுத் தனிவழியில் வாரலை நீயென் பவர்க்கே வருவன வண்புகழே.
|
(226) |
| |
| குறி விலக்குவித்தல் |
| |
| |
பிளவு மதிச்செஞ் சடையாளர் வெங்கைப் பெருந்தகைதான் தளவு நகைக்கருங் கண்மட வாய்விண் டலமுகட்டை அளவு பொழிற்குறி வந்தாற் றுயில்பொழு தார்க்கும்புள்ளாற் களவு வெளிப்படி னென்னாய் முடியுநங் காரியமே.
|
(227) |
| |
| வெறி விலக்குவித்தல் |
| |
| |
மறிகொண்ட வங்கையர் வெங்கையி லேமென் மலர்ப்பொழில்வாய்க் குறிகொண்ட வன்பர் தருநோயென் றன்னை குறித்திலளாய் நெறிகொண்ட தெய்வ மணங்கிற்றென் றேதன் னினைவழிந்து வெறிகொண்ட னண்மற் றொருவிதி யோவிது மெல்லியலே.
|
(228) |
| |
| பிற விலக்குவித்தல் |
| |
| |
அருங்கண்ணி வெண்மதி சூடும் பிரான்வெங்கை யாவிமலர்க் கருங்கண்ணி கங்கையின் மென்றூவி யன்னங் கருதிவைத்த பெருங்கண்ணி யிற்புனற் காக்கைபட் டாங்குப் பிறர்நமதில் மருங்கண்ணி வந்தன ரென்பது கேட்டின்னு மாய்ந்திலமே.
|
(229) |
| |
|
| |
226.26. சேறலரும்-செல்லுதற்கரிய. வாரலை-வராதே. வண்புகழ்-பெரும்புகழ். 227.27. தளவு-முல்லையரும்பு. நகை-பல். விண்டலம்-விண்ணாகிய தலம். ஆர்த்தல்-ஒலித்தல். 228.28. பொழில்-சோலை. குறி-குறியிடம். குறித்தல்-நினைத்தல். அணங்குதல்-வருத்துதல். வெறி-வெறியாடல். 229.29. கண்ணி-மாலை; கண்களையுடையவள்; வலை. அன்னம் கருதி-அன்னத்தைப் பிடிக்க எண்ணி. அண்ணல்-கிட்டல்.
|
|
|
|