| 9. திருவெங்கைக்கோவை |
|
| குரவரை வரைவெதிர்கொள்ளுவித்தல் |
| |
| |
பூண்கொண்ட மென்முலை யாய்வெங்கை வாணர் பொதியவெற்பில் ஏண்கொண்ட நங்கருத் தீன்றவர்க் கோது மிசைவுபெறா நாண்கொண்டு நங்கற் பழிதனன் றோவன்றி நாணிழந்து மாண்கொண்ட வங்கற் புறுதனன் றோநம் மரபினுக்கே.
|
(230) |
| |
வரைவு கடாதல் வினவியசெவிலிக்கு மறைத்தமைவிளம்பல் |
| |
| |
வண்டு கலிக்குந் தொடையாயெம் மன்னையிம் மாதுதுயில் விண்டு தரித்தில ளென்கொலென் றாளரன் வெங்கைவெற்பிற் பண்டு புனத்தில் வருமத வாரணம் பாய்கனவு கண்டு பினைத்துயின் றாளிலை யென்று கரந்தனனே.
|
(231) |
| |
| அலரறிவுறுத்தல் |
| |
| |
கோட்டு மலைவில் விறலாளர் வெங்கைக் குளிர்சிலம்பிற் றீட்டு மிலைமலி வேலண்ண லேநின் றிருக்கரத்தால் வேட்டு மகிழ்செய் யணங்கென வேயிவண் மென்குழலிற் சூட்டு மலர்கண் டுலகமெ லாமலர் சூட்டியதே.
|
(232) |
| |
| தாயறிவுணர்த்தல் |
| |
| |
நீர்பூத்த செஞ்சடை யார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பிற் கார்பூத்த வண்மை மடங்கலன் னாயன்னை காலமன்றி ஏர்பூத்த பைந்தளிர் மெல்லிய லாமிவ் விளங்கொடிமேற் பீர்பூத்த தென்னைகொ லோவறி யேனெனப் பேசினளே.
|
(233) |
| |
|
| |
230. பூண்-அணிகலம். இசைவு-உடன்பாடு. நாண்-நாணம். மாண்-பெருமை. 231. கலிக்கும்-ஒலிக்கும். துயில் விண்டு-துயில் நீங்கி. பாய்-பாய்ந்த. தரித்திலள்-ஆற்றிலள். கரத்தல்-மறைத்தல். 232. கோட்டும்-வளைத்த. விறல்-வெற்றி. தீட்டுதல்-கூராக்கல். அலர் இரண்டனுள் முன்னையது மலர், பின்னையது பழிதூற்றல். 233. பீர்-பசலை. வண்மை-வள்ளன்மை. மடங்கல்-சிங்கம்.
|
|
|
|