| 9. திருவெங்கைக்கோவை |
|
| குறிபெயர்த்திடுதல் |
| |
| |
ஐயுற் றெமர்தெளி வானிருந் தார்நும் மடிச்சுவடு கொய்யுற்ற பூம்பொழி லூடுகண் டேமென் குழலுமையாள் மெய்யுற்ற வங்கணர் வெங்கையி லேகுறி வேறுகொண்டு மையுற்ற கண்ணி யொடும்விளை யாடுக மன்னவனே.
|
(239) |
| |
| பகல்வருவானை யிரவுவருகென்றல் |
| |
| |
நந்தே டவிழ்ந்து நறவூற் றிருக்கு நளினமிசை வந்தேறி மென்றுயில் கொள்வெங்கை வாணர் வரையின்மலர்க் கொந்தேறு மென்குழ லாண்முக வாவிக் குமுதமலர்ச் செந்தே னிரவினல் லாற்கிடை யாதென்ன செய்யினுமே.
|
(240) |
| |
| இரவுவருவானைப் பகல்வருகென்றல் |
| |
| |
சேல்கொண்ட தண்பணை சூழ்வெங்கை வாணர்தஞ் சேய்திருக்கை வேல்கொண்ட கண்ணிளம் பெண்ணோடு கூட விருப்பமுறும் மால்கொண்ட வெங்களி றன்னாய் மலர்மனை வாய்திறக்குங் கோல்கொண்டு வந்திலை யேலரி தாலவட் கூடுதலே.
|
(241) |
| |
| பகலினுமிரவினும் பயின்றுவருகென்றல் |
| |
| |
சொல்லும் பொருளு மெனநிறை வாரிளஞ் சூன்மிடற்ற நெல்லுங் கரும்பு நிறைவெங்கை வாணர் நெடுஞ்சிலம்ப வில்லும் பிறையும் பணிவா ணுதற்றளிர் மெல்லியலை அல்லும் பகலு மகலா திவண்வந் தடைந்தருளே.
|
(242) |
| |
| பகலினுமிரவினு மகலிவணென்றல் |
| |
| |
பாவலர் பாடும் புகழ்வெங்கை வாணர் பனிவரைமேல் மேவல ராருயி ருண்டமை வேலவ வெம்பகலில் ஏவல ராய நெருங்குமின் றேன்வண் டெனவிரவிற் காவலர் சூழ்ந்து திரிவார்பொன் காத்த கடியெனவே.
|
(243) |
| |
|
| |
239. சுவடு-அடையாளம். கொய்தல்-பறித்தல். மெய்-திருமேனி; இஃது இடப்பாகத்தைக் குறித்தது. அங்கணர்-அருளையுடைய கண்ணர். 240. நந்து-சங்கு. நறா-தேன். நளிநம்-தாமரை. குமுதம்-செவ்வல்லிமலர். இது தலைவியின் வாயை உணர்த்திற்று. 241. சேல்-மீன்வகைகளில் ஒன்று. பணை-வயல். சேய்-முருகக் கடவுள். மால் - மதமயக்கம். மலர்மனை வாய்திறக்குங் கோல் என்றது கதிரவன் ஒளிப்பிழம்பை. திறக்குங் கோல்-திறவு கோல். 242. இளம்சூல் மிடற்ற-இளஞ்சூலைக் கொண்ட கழுத்தினையுடைய. எங்கும் நிறைந்தவர் என்பார் சொல்லும் பொருளுமென நிறைவார் என்றார். 243. பாவலர்-சமயாசாரியர்கள் நால்வர். மேவலர்-பகைவர். ஆயம்-தோழியர் கூட்டம். காவலர்-ஊர்காவலர்.
|
|
|
|