| 9. திருவெங்கைக்கோவை |
|
| கனவுநலிபுரைத்தல் |
| |
| |
மனவே யணியுந் திருவெங்கை வாணர் வரையணங்கு சினவே லிறைவநின் றோளொடு கொங்கை திளைக்கவருங் கனவே யுயருந் துறக்கமென் பாணினைக் காண்பரிய நனவே துயரந் தருகின்ற தீவெந் நரகென்பளே.
|
(249) |
| |
| கவினழிபுரைத்தல் |
| |
| |
கருவரை யெங்க டிருவெங்கை வாணர்தங் கண்ணழித்த ஒருவரை யன்ன வெழிலுடை யீரிங் குமதருளால் இருவரை பொன்னு மிருவேலை முத்தமு மீன்றனவாற் குருவரை யன்னமென் றோளுடை யாட்குக் குறையென்னையே.
|
(250) |
| |
ஒருவழித்தணத்தல் தன்பதிக்ககற்சி தலைவன்சாற்றல் |
| |
| |
என்மன நல்லிளம் பூங்கொடி பால்வைத் திளங்கொடிதன் நன்மன மென்னொடு கொண்டூர் புகுந்திங்கு நான்வருவேன் வன்மனம் வந்து புகாவீசர் வெங்கை மருவலர்போல் நின்மன மஞ்சலை செங்கயல் வாட்கண் ணிரைவளையே.
|
(251) |
| |
| பாங்கிவிலக்கல் |
| |
| |
ஊனா ருடலி னுயிர்போல வேயவ் வுயிரினுயிர் தானா மொருவன் றிருவெங்கை வெற்பிலுன் றன்பதிக்குப் போனால் விரைந்து வருவா யலையன்ப போகலைநீ யானா யிழைதுயர் கண்டாவி கொண்டிங் கிருக்கிலனே.
|
(252) |
| |
|
| |
249. மனவு-அக்குமணி. துறக்கம்-சுவர்க்கம். திளைத்தல்-அழுந்தல். காண்பு-காண்டல். 250. கருவரை-கருப்ப வேதனையை ஒழிக்கின்ற. அஃது இங்குப் பிறவியென்னும் பொருட்டு. கண்ணழித்த-கண்ணால் அழிக்கப்பட்ட. 251. இளம்பூங்கொடி என்றது தலைவியை. ஊர் புகுந்திங்கு நான் வருவேன் என்றது அங்குத் தாழ்க்காது விரைந்து வருவேன் என்றபடி. வன்மனம்-வன்னெஞ்சு. 252. ஊன்-ஆகு பெயர். ஒருவன்-ஒப்பிலி. பதி-ஊர். ஆவி-உயிர். ஆயிழை-அன்மொழித் தொகை.
|
|
|
|