| 9. திருவெங்கைக்கோவை |
|
| தலைவனீங்கல்வேண்டல் |
| |
| |
நீர்புக்கு வாழு நெடுமீனந் நீர்தனை நீங்கியுய்ந்தாற் றார்புக்கு வாழு முலையாளை யானுந் தணந்துய்குவேன் மார்புக்கு மாலை யரவா னவர்வெங்கை வாணர்வெற்பில் ஊர்புக்கு நான்வர வேண்டுமின் னேநின் னுளத்திசையே.
|
(253) |
| |
| பாங்கிவிடுத்தல் |
| |
| |
கொந்தார் மலர்க்குழல் வெண்முத்த வாணகைக் கோமளத்தின் சிந்தா குலமுற்று நீயறி வாயன்ப தேமொழிக்கு நந்தா மணிவிளக் கன்னார்தம் வெங்கை நகரினிற்போய் வந்தா ரெனச்சென்று நான்கூற நீசென்று வந்தருளே.
|
(254) |
| |
| பாங்கிதலைவிக் கவன்செலவுணர்த்தல் |
| |
| |
அம்மூல காரணர் வெங்கைபு ரேச ரணிவரைமேற் செம்மூரி வேலவர் நீயா ரணங்கின்முன் செல்லுமுனம் எம்மூர் புகுந்து வருவலென் றேகின ரேந்திழையாய் நம்மூர் மருங்குற விந்தேரம் வந்து நணுகுவரே.
|
(255) |
| |
| தலைவிநெஞ்சொடு புலத்தல் |
| |
| |
விளித்தா ருயிரை யடிநீழல் வைப்பவர் வெங்கையிலே அளித்தார் புனைகுழ லாயக லேனென் றகந்தெளியத் தெளித்தா ரகன்றன ரேலவர் வார்த்தை தெளிந்துமனங் களித்தார் தமக்குள தோபிழை தானிந்தக் காசினிக்கே.
|
(256) |
| |
|
| |
253. உய்தல்-உயிர் வாழ்தல். தார்-முத்துமாலை, பூமாலை. தணத்தல்-பிரிதல். மின் : உவமையாகுபெயர். இசைதல்-உடன் படல். 254. கொத்து-கொந்து என மெலிந்து நின்றது. கோமளம்-பண்பாகு பெயர். சிந்தாகுலம்-வடநூன் முடிபு. 255. மூல காரணர்-உலகத் தோற்ற மறைவுகட்குக் காரணமாக இருப்பவர். மருங்கு-அருகு. நணுகல்-சேர்தல். 256. விளித்தார்-சாங் காலத்தில் கூப்பிட்டவர். விளிந்தார் என்பது விளித்தார் என வலித்தல் பெற்றதென்றலு மொன்று. விளிதல்-இறத்தல்.
|
|
|
|