| 9. திருவெங்கைக்கோவை |
|
| பாங்கி தலைவியை யாற்றுவித் திருந்தமைகூறல் |
| |
| |
விண்மணி பொய்ப்பினும் பொய்யாநின் வாய்மை விளம்பியெங்கள் கண்மணி யொத்தசெவ் வேலிறை வாவுயிர் காத்தளித்தேன் ஒண்மணி கண்டத் தொருவெங்கை வாண ருயர்சிலம்பிற் பெண்மணி யைப்பிறை வாணுத லீர்ங்குழற் பேதையையே.
|
(283) |
| |
வரைவியல் வரைவுமலிவு காதலன் முலைவிலைவிடுத்தமை பாங்கி காதலிக்குணர்த்தல் |
| |
| |
மலைவிலை யென்ற நிலைவெங்கை வாணர் மணிவரைமேல் இலைவிலை யிந்த மணிக்கு முலைக்குமென் றெண்ணியொரு கொலைவிலை வென்ற நுதன்மட வாய்நங் கொழுநர்முகிழ் முலைவிலை நல்கின ரைந்தலை நாக முழுமணியே.
|
(284) |
| |
| காதலி நற்றாயுள்ளமகிழ்ச்சி யுள்ளல் |
| |
| |
நான்ற சடிலத் திருவெங்கை நாயகர் நல்குமொரு கான்ற குருதிக் குடர்மாலை வேலுடைக் காளையெழில்
போன்ற வுருவத் திறைவர்மென் றோளிடு பூந்தொடைகண் டீன்ற பொழுதிற் பெரிதுவ வாநிற்கு மெம்மனையே.
|
(285) |
| |
|
| |
283. கண்மணி-கட்பாவை. பெண்மணி யென்பதற்குப் பொருள் பெண்களுட் சிறந்தவள் என்பது.284. மலைவு-மயக்கம். மலைவிலை என்ற நிலை-அசையாத யோகநிலை. விலையிலை-மதிப்பில்லை. முழுமணி-பொள்ளா மணி. 285. நான்ற-தொங்குகிற. சடிலம்-சடாபாரம். கான்ற குருதி-உமிழ்ந்த இரத்தம். குடர்மாலை-குடராகிய மாலை.
|
|
|
|