முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
பாங்கி தலைவியை யாற்றுவித் திருந்தமைகூறல்
விண்மணி பொய்ப்பினும் பொய்யாநின் வாய்மை விளம்பியெங்கள்
கண்மணி யொத்தசெவ் வேலிறை வாவுயிர் காத்தளித்தேன்
ஒண்மணி கண்டத் தொருவெங்கை வாண ருயர்சிலம்பிற்
பெண்மணி யைப்பிறை வாணுத லீர்ங்குழற் பேதையையே.
(283)
வரைவியல்
வரைவுமலிவு
காதலன் முலைவிலைவிடுத்தமை பாங்கி காதலிக்குணர்த்தல்
மலைவிலை யென்ற நிலைவெங்கை வாணர் மணிவரைமேல்
இலைவிலை யிந்த மணிக்கு முலைக்குமென் றெண்ணியொரு
கொலைவிலை வென்ற நுதன்மட வாய்நங் கொழுநர்முகிழ்
முலைவிலை நல்கின ரைந்தலை நாக முழுமணியே.
(284)
காதலி நற்றாயுள்ளமகிழ்ச்சி யுள்ளல்
நான்ற சடிலத் திருவெங்கை நாயகர் நல்குமொரு
கான்ற குருதிக் குடர்மாலை வேலுடைக் காளையெழில்

போன்ற வுருவத் திறைவர்மென் றோளிடு பூந்தொடைகண்
டீன்ற பொழுதிற் பெரிதுவ வாநிற்கு மெம்மனையே.
(285)

283. கண்மணி-கட்பாவை. பெண்மணி யென்பதற்குப் பொருள் பெண்களுட் சிறந்தவள் என்பது.284. மலைவு-மயக்கம். மலைவிலை என்ற நிலை-அசையாத யோகநிலை. விலையிலை-மதிப்பில்லை. முழுமணி-பொள்ளா மணி. 285. நான்ற-தொங்குகிற. சடிலம்-சடாபாரம். கான்ற குருதி-உமிழ்ந்த இரத்தம். குடர்மாலை-குடராகிய மாலை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்