| 9. திருவெங்கைக்கோவை |
|
| பாங்கி தமர்வரைவெதிர்ந்தமை தலைவிக்குணர்த்தல் |
| |
| |
புரவல ரொக்குங் குடிவாழும் வெங்கை புரத்தரிந்தீ வரவல ரொக்கு மிடற்றார்தங் கையிள மான்விழியாய் இரவல ரொக்கு மிறையோன் முலைவிலை யின்மொழியாற் றரவல ரொக்கு மெதிர்புகுந் தார்க்குந் தடமுரசே.
|
(286) |
| |
| தலைமக ளுவகையாற்றா துளத்தொடுகிளத்தல் |
| |
| |
வில்லுங் கணையு மதவேளு மாய விழித்தவரெஞ் சொல்லும் புனையுந் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற் கொல்லுந் துயர முலைமேற் பசப்பினைக் கொண்டுநெஞ்சே செல்லுஞ் செலவை யுணர்த்திய தாமிச் செழுமுரசே.
|
(287) |
| |
| தலைவனைப் பாங்கிவாழ்த்தல் |
| |
| |
கணத்தி னிலங்கு மதிப்பிள்ளை யொன்றிளங் கட்செவியின் பணத்தி னுறங்குஞ் சடையாளர் வெங்கைப் பனிவரைமேற் குணத்தி னுயர்ந்த கொடியிடை யாவி கொடுப்பதற்கா மணத்தி னலங்கல் புனையுநங் காதலர் வாழியவே.
|
(288) |
| |
| தலைவிமணம்பொருட்டாக வணங்கைப்பராநிலைகாட்டல் |
| |
| |
நிலமா தணிநிகர் வெங்கையு ளான்றரு நீமுனமெங் குலமா தினைமணஞ் செய்தாங் கெனையுங் கொழுநர்வந்து நலமா மணம்புணர்ந் தால்விழ வாற்றுவ னானெனவே பலமா தருந்தொழும் பாவைசெவ் வேளைப் பரவுறுமே.
|
(289) |
| |
| அதுகண்டோன் மகிழ்தல் |
| |
| |
மால்பற் றியபொழில் வெங்கைபு ரேசர் மணிவரைமேற் சேல்பற் றியவிழி யாளுல கோர்முனஞ் செங்கையினாற் கால்பற்றி யம்மியின் மீதே யிருத்தல் கடைப்பிடித்து வேல்பற் றியதெய்வ சூளா மணியினை வேண்டுமென்னே.
|
(290) |
| |
|
| |
286. இந்தீவரம் அலர் ஒக்கும்-கருங்குவளை மலரை நிகர்த்த. தடமுரசு-பெரிய முரச வாத்தியம். 287. கணை-அம்பு. மதவேள்-இருபெயரொட்டு. மாய்தல்-மடிதல். புனைதல்-தரித்தல். பசப்பு-பசலைநிறம். செலவு-போக்கு. 288. கணம்-விண்மீன். மதிப்பிள்ளை யொன்று-ஒருதலையாகிய திங்கள். கொடியிடை-அன்மொழித் தொகை. அலங்கல்-தொழிலாகு பெயர். 289. விழா-திருவிழா. ஆற்றல்-செய்தல். பாவை-ஆகுபெயர். பரவுறல்-வழிபடல். 290. மால்-மேகம். பற்றல்-தவழ்தல். கடைப்பிடித்தல்-உறுதியாகப் பற்றுதல்.
|
|
|
|