முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
கையறுதோழி கண்ணீர்துடைத்தல்
கோலம் புனைதலிற் குற்றமின் றான்மலர் கொய்துவருங்
காலந் தவறில பந்திடைத் தோல்வியுங் கண்டிலமால்
ஆலந் திகழ்மிடற் றார்வெங்கை நாட்டுன தம்புயத்தில்
நீலஞ் சிறுமுத் துதிர்ப்பதென் னோவுரை நேரிழையே.
(291)
தலைமகள்கலுழ்தற் காரணங்கூறல்
தெண்ணீர் முடியர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்
பண்ணீர்மை மென்மொழிப் பாவைநல் லாயிப் படிமுழுதும்
எண்ணீர்மை யன்பரைக் கண்டன மால்வந்த தென்றெனது
கண்ணீர் கொடுமென் முலைமேற் பசப்பைக் கழுவுறவே.
(292)
தலைவன்தெய்வங்காட்டித் தெளிப்பத் தெளிந்தமைகூறல்
கொலைசூழ் குருகுமொன் றுண்டாற் கரிநெறு கூறுமெனில்
இலைசூழ் மனையின் முனிவரெல் லாந்தொழு மெங்கள்பழ
மலைசூழ் மறுகெழில் வெங்கைநன் னாடர் மனந்தெளியச்
சிலைசூழ் வனந்திகழ் தெய்வதங் காட்டித் தெளித்ததற்கே.
(293)
பாங்கி யியற்பழித்தல்
முனங்குழை யாத மலைகுழைத் தார்தம் முதல்விகன
தனங்குழை யாது குழைந்தார்தம் வெங்கைத் தடஞ்சிலம்பிற்
கனங்குழை யாயுனக் கீந்தா ரிலைகொனங் காவலனார்
மனங்குழை யாமன் முனந்தா மருந்து மருந்தினையே.
(294)

291. கோலம் புனைதல்-தலைப்பணி திருத்தல் முதலிய அழகு செய்தல். பந்து-பந்தாட்டம். தோல்வி-தோற்றல். ஆலாலம்-பாற்கடலில் தோன்றிய நஞ்சு. 292. பண்ணீர்மை-பண்ணின் குணம்; அஃதாவது இனிமை. பாவை-பொம்மை. கழுவுற-கழுவ 293. இலைசூழ்மனை-பர்ணசாலை. பர்ணம்-இலை. இதனை இலைக்குடில் என்பர். மறுகு-தெரு. வனந்திகழ் தெய்வதம்-வனதேவதை. தெளித்தல்-தேற்றுதல். கொலைசூழ்தல்-கொன்றுண்டல். 294. குழையாமை மலைக்கியல் யென்பது தோன்றக் குழையாத மலையென்றார். மலை யிங்கு மேருமலையைக் குறித்தது. கனதனம்-பெருங்கொங்கை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்