| 9. திருவெங்கைக்கோவை |
|
| தலைமக ளியற்படமொழிதல் |
| |
| |
உழைகா தலிக்குங் கரத்தார் நிறைமதி யொத்தசங்கக் குழைகாதிற் பெய்பவர் தென்வெங்கை வாணர் குளிர்சிலம்பின் மழைகா தலிக்குங் கொடையன்பர் மேற்பிறர் வாயுரைக்கும் பிழைகாதிற் கேட்பவந் தோபடைத் தானயன் பெண்பிறப்பே.
|
(295) |
| |
| தெய்வம்பொறைகொளச் செல்குவமென்றல் |
| |
| |
புற்றங் கதமணி வெங்கைபு ரேசர் பொருப்பிலெங்கள் சுற்றந் தொழுமெங் கொழுநர்நிற் காட்டிமுன் சூளுரைத்த குற்றம் பொறுத்தரு ளென்றடி போற்றிக் கொழுமலர்தூய்ச் செற்றந் தணிக்குதும் பெண்ணே யினிக்குல தெய்வத்தையே.
|
(296) |
| |
| தலைவி யில்வயிற்செறித்தமை யியம்பல் |
| |
| |
சுட்டா வறிவுரு வானாரவ் வானிற் சுரர்தமக்குங் கிட்டா வமுதனை யார்வெங்கை வாணர் கிரியணங்கே மொட்டா முலையிற் பசலைகண் டேமனை முன்றில்விடாள் இட்டா ளிலைவிலங் கென்பதொன் றேகுறை யீன்றவட்கே.
|
(297) |
| |
| செவிலி கனையிரு ளவன்வரக் கண்டமைகூறல் |
| |
| |
மீனைக் கடந்த பொழில்சூ ழரன்றிரு வெங்கைவெற்பர் கானைக் கடந்து குறிவா யிருள்வரக் கண்டனள்யாய் மானைக் கடந்த விழியாய் தரள மணிவடத்த ஆனைக் கடந்த விளஞ்சிங்க மோவென் றயிர்த்தனளே.
|
(298) |
| |
|
| |
295. உழை காதலிக்கும் கரத்தார் என்றமையால் திருக்கையின் பேரழகு பெறப்படும். சங்கக்குழை-சங்கினாலியன்றதோடு. பெய்தல்-இடுதல். மழை காதலிக்கும் கொடையன்பர் என்றமையால் பெருங்கொடையார் என்பது பெறப்படும். அந்தோ-இரக்கக்குறிப்பு. பிறர் என்றது பாங்கியை. 296. அங்கதம்-பாம்பு. பொருப்பு-மலை. சுற்றம்-ஆகுபெயர். சூளுரைத்தல்-உறுதியாக ஆணையிடல். செற்றம்-கோபம். 297. மனோவாக்குக் காயங்களாற் சுட்டியறியப்படாதவராகலானும் ஞானவடிவாயிருப்பவராதலானும் இறைவர் சுட்டாவறிவுருவானார் என்று சுட்டப்பட்டார். மொட்டு-அரும்பு. 298. மான்விழி-ஆகு பெயர்கள். வெற்பர்-மலை நாடர். கான்-காடு. யாய்-தாய்.
|
|
|
|