| 9. திருவெங்கைக்கோவை |
|
| மணம் விலக்கல் |
| |
| |
வன்னித் திருவிழி யார்வெங்கை வாணர் மணிவரைமேல் இந்தித் திலவட நல்கினற் கேயன்றி யேதிலர்க்குக் கன்னிக் குமரி மணமுடை யாளல்லள் காண்டகைய சென்னிக் கணிமுடி தாட்கணி யாகுஞ் செயலில்லையே.
|
(305) |
| |
| தலைமகள்வேற்றுமைகண்டு நற்றாய்செவிலியைவினாதல் |
| |
| |
நெடுங்கோ வளவயல் வெங்கைபு ரேசரை நெஞ்சிருத்தாக் கொடுங்கோ லரசர் குடைக்கீ ழடங்குங் குடியெனவே இடுங்கோல் வளைவிழி நீரொழி யாம லிருப்பதென்னோ அடுங்கோல் புரைவிழி வெண்முத்த வாணகை யாயிழையே.
|
(306) |
| |
| செவிலிநற்றாய்க்கு முன்னிலைமொழியாலறத்தொடுநிற்றல் |
| |
| |
புலங்கண் டளவின் மறைவெங்கை வாணர் பொருப்பிடைச்செந் நிலங்கண் டளவி லுறைதிரிந் தாங்கொர் நெடுந்தகைதன் நலங்கண் டளவி னலந்திரிந் தாண்மென் னகின்மிசையோர் கலங்கண் டளவின் மிகநோ மருங்குலுன் காரிகையே.
|
(307) |
| |
| நற்றாய் தமருக் கறத்தொடுநிற்றல் |
| |
| |
வேலோடு வாளும் பயினமர் காணம் விளங்கிழையைப் பாலோடு தேன்கலந் தாங்கிள வாளை பணைமருதச் சேலோடு பாயுந் திருவெங்கை வாணர் சிலம்பினெடும் மாலோடு மான மொருவே லவற்கு மணஞ்செயுமே.
|
(308) |
| |
|
| |
305.05. வன்னி-நெருப்பு. தேவர்களுக்கு அவியுணவு கொடுப்பவன் என்பது பொருள். ஏதிலர்-அயலார். தகை-அழகு. 306.06. கோ-ஆகாயம். கோல்வளை-அன்மொழித் தொகை. கோல்-புள்ளி. 307.07. பொருப்பு-மலை. செந்நிலம்-செந்தரை; உறைநீர். திரிதல்-வேறுபடல். நெடுந்தகை-பெரியோன். நலம்-அழகு. நலம்திரிதல்-நலம் வேறுபடுதல். 308.08. நெடுமால்-திருமால். மானல்-நிகர்த்தல். சிலம்பு-மலை.
|
|
|
|