முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
மணம் விலக்கல்
வன்னித் திருவிழி யார்வெங்கை வாணர் மணிவரைமேல்
இந்தித் திலவட நல்கினற் கேயன்றி யேதிலர்க்குக்
கன்னிக் குமரி மணமுடை யாளல்லள் காண்டகைய
சென்னிக் கணிமுடி தாட்கணி யாகுஞ் செயலில்லையே.
(305)
தலைமகள்வேற்றுமைகண்டு நற்றாய்செவிலியைவினாதல்
நெடுங்கோ வளவயல் வெங்கைபு ரேசரை நெஞ்சிருத்தாக்
கொடுங்கோ லரசர் குடைக்கீ ழடங்குங் குடியெனவே
இடுங்கோல் வளைவிழி நீரொழி யாம லிருப்பதென்னோ
அடுங்கோல் புரைவிழி வெண்முத்த வாணகை யாயிழையே.
(306)
செவிலிநற்றாய்க்கு முன்னிலைமொழியாலறத்தொடுநிற்றல்
புலங்கண் டளவின் மறைவெங்கை வாணர் பொருப்பிடைச்செந்
நிலங்கண் டளவி லுறைதிரிந் தாங்கொர் நெடுந்தகைதன்
நலங்கண் டளவி னலந்திரிந் தாண்மென் னகின்மிசையோர்
கலங்கண் டளவின் மிகநோ மருங்குலுன் காரிகையே.
(307)
நற்றாய் தமருக் கறத்தொடுநிற்றல்
வேலோடு வாளும் பயினமர் காணம் விளங்கிழையைப்
பாலோடு தேன்கலந் தாங்கிள வாளை பணைமருதச்
சேலோடு பாயுந் திருவெங்கை வாணர் சிலம்பினெடும்
மாலோடு மான மொருவே லவற்கு மணஞ்செயுமே.
(308)

305.05. வன்னி-நெருப்பு. தேவர்களுக்கு அவியுணவு கொடுப்பவன் என்பது பொருள். ஏதிலர்-அயலார். தகை-அழகு. 306.06. கோ-ஆகாயம். கோல்வளை-அன்மொழித் தொகை. கோல்-புள்ளி. 307.07. பொருப்பு-மலை. செந்நிலம்-செந்தரை; உறைநீர். திரிதல்-வேறுபடல். நெடுந்தகை-பெரியோன். நலம்-அழகு. நலம்திரிதல்-நலம் வேறுபடுதல். 308.08. நெடுமால்-திருமால். மானல்-நிகர்த்தல். சிலம்பு-மலை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்