| 9. திருவெங்கைக்கோவை |
|
| பாங்கி தலைவிக்குடன்போக்குணர்த்தல் |
| |
| |
தேவியுஞ் சம்புவு நீங்காத வெங்கைச் செழுஞ்சிலம்பர் காவியுங் கஞ்சமு மாம்பலும் பூத்துக் கவின்கனியும் வாவியும் பெண்ணணங் கென்றார் கதிர்தெறும் வன்சுரத்திற் காவியுங் கண்ணு மமுதமும் போன்றொளி ராரணங்கே.
|
(313) |
| |
| தலைவி நாணழிவிரங்கல் |
| |
| |
ஊணிலை யாகநஞ் சுண்டோன் றிருவெங்கை யூரனைய வாணிலை யாகு மதர்விழி யாய்முன் வனைந்திருந்த பூணிலை யாகு மவயவம் பொலிவழிவார் நாணிலை யாகிற் றனுவாற் பயனென்னை நங்கையர்க்கே.
|
(314) |
| |
| கற்புமேம்பாடு பூண்முலைப்பாங்கி புகறல் |
| |
| |
சேண்போலு மேனியர் தென்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற் பாண்போலு மென்மொழிச் செந்துவர் வாய்மலர்ப் பாவையன்னாய் பூண்போலு நாண்முத லெல்லாமு மங்கலப் பூங்கழுத்தில் நாண்போலு மாணுறுங் கற்பொன்று மேகுல நாரியர்க்கே.
|
(315) |
| |
| தலைவி யொருப்பட்டெழுதல் |
| |
| |
நரைப்பால் விடையர் பிறையார் சடையர்மெய்ஞ் ஞானமயர் வரைப்பாவை பங்கர் திருவெங்கை வாணர் மணிவரைமேல் உரைப்பா ருரைப்பவை யெல்லா முரைக்க வுனக்கிசைவேற் றிரைப்பாவை யேசெல்லு வேனன்ப ரோடருந் தீச்சுரமே.
|
(316) |
| |
|
| |
313.13. சம்பு-சிவபெருமான். கவின் கனிதல்-அழகு முதிர்தல். தெறும்-வருத்தும். வன்சுரம்-வலிய பாலைநிலம். 314.14. வாள் நிலையாகும்-வாளினது தன்மையைப் போன்ற. மதர்-மதர்த்த.பொலிவு-அழகு. ஊண்-ஆகுபெயர். 315.15. சேண்-ஆகாயம். பாண்போலும்-இசையைப் போலும். செந்துவர்-செம்பவளம். மாண்உறும்-மாட்சிமை பொருந்திய. திகம்பரராகையால் சேண்போலு மேனியர் என்றார். 316.16. நரைப்பால்-மிகுவெண்மை. வரைப்பாவை-உமாதேவி. இசைவு-உடன்பாடு. திரைப்பாவையே என்றது பாங்கியை.
|
|
|
|