| 9. திருவெங்கைக்கோவை |
|
| பாங்கி சுரத்தியல்புரைத்துழித் தலைமகள் சொல்லல் |
| |
| |
மாவோ வெனுங்கறைக் கண்டர்வெங் கேசர் மணிவரைமேல் ஏவோ வெனுங்கண் ணிளங்கொடி யேமத னெய்யுநறும் பூவோ புயல்வெண் மதியோ கனிகொளும் பூங்குயில்வாழ் காவோ விறைவ ருடனே புகுங்கள்ளிக் காடெனக்கே.
|
(317) |
| |
| பாங்கி கையடைகொடுத்தல் |
| |
| |
இறந்தார் பிறந்துழ லாதே முதுகுன் றியற்றுசெயல் சிறந்தார் புகழ்வெங்கை செய்வா னருளுஞ் சிவனுமையை அறந்தா னுருவுகொண் டன்னான் வசிட்ட னருந்ததியைத் துறந்தாலு நீதுற வேலைய னேநின் றுணைவியையே.
|
(318) |
| |
| பாங்கி வைகிருள் விடுத்தல் |
| |
| |
வெங்கே தகைமுனி வார்வெங்கை வாணர்தம் வெற்பிலன்னை எங்கே மகளென் றிருப்பா ளவட்குன் னியல்பதனை இங்கே யிருந்துரைத் தோரிமைப் போதினு ளெப்படியும் அங்கேவந் துன்னொடு கூடுவ னான்மல ராரணங்கே.
|
(319) |
| |
| தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல் |
| |
| |
கொடும்பா விகளு மொருமா தவப்பயன் கொள்வரென நெடும்பார் மிசையின் றறிந்தாம் விழிபொழி நீர்பெருகச் சுடும்பா லையிலுன் றிருவடித் தாமரை தோய்ந்தமையால் அடும்பா தகநஞ்ச முண்டமை வார்வெங்கை யாரணங்கே.
|
(320) |
| |
|
| |
317.17. மா-நீலமணி. கறை-விடம். ஏ-அம்பு. இளங்கொடியே என்றது பாங்கியை. கா-சோலை. 318.18. செய்வான்-செய்ய. ஐயனே யென்றது தலைமகனை. துணைவி-தலைவி. துறத்தல்-கைவிடுதல். கையடை-அடைக்கலம். 319.19. வெங்கேதகை-வெவ்விய தாழம்பூ. முனிவார்-வெறுப்பவர். இயல்பு-சுரத்திற் சென்ற செய்தி. 320.20. மாதவம்-பெருந்தவம். கொள்வர்-பெறுவர். தோய்தல்-படிதல். அடுதல்-கொல்லுதல்.
|
|
|
|