முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
பாங்கி சுரத்தியல்புரைத்துழித் தலைமகள் சொல்லல்
மாவோ வெனுங்கறைக் கண்டர்வெங் கேசர் மணிவரைமேல்
ஏவோ வெனுங்கண் ணிளங்கொடி யேமத னெய்யுநறும்
பூவோ புயல்வெண் மதியோ கனிகொளும் பூங்குயில்வாழ்
காவோ விறைவ ருடனே புகுங்கள்ளிக் காடெனக்கே.
(317)
பாங்கி கையடைகொடுத்தல்
இறந்தார் பிறந்துழ லாதே முதுகுன் றியற்றுசெயல்
சிறந்தார் புகழ்வெங்கை செய்வா னருளுஞ் சிவனுமையை
அறந்தா னுருவுகொண் டன்னான் வசிட்ட னருந்ததியைத்
துறந்தாலு நீதுற வேலைய னேநின் றுணைவியையே.
(318)
பாங்கி வைகிருள் விடுத்தல்
வெங்கே தகைமுனி வார்வெங்கை வாணர்தம் வெற்பிலன்னை
எங்கே மகளென் றிருப்பா ளவட்குன் னியல்பதனை
இங்கே யிருந்துரைத் தோரிமைப் போதினு ளெப்படியும்
அங்கேவந் துன்னொடு கூடுவ னான்மல ராரணங்கே.
(319)
தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல்
கொடும்பா விகளு மொருமா தவப்பயன் கொள்வரென
நெடும்பார் மிசையின் றறிந்தாம் விழிபொழி நீர்பெருகச்
சுடும்பா லையிலுன் றிருவடித் தாமரை தோய்ந்தமையால்
அடும்பா தகநஞ்ச முண்டமை வார்வெங்கை யாரணங்கே.
(320)

317.17. மா-நீலமணி. கறை-விடம். ஏ-அம்பு. இளங்கொடியே என்றது பாங்கியை. கா-சோலை. 318.18. செய்வான்-செய்ய. ஐயனே யென்றது தலைமகனை. துணைவி-தலைவி. துறத்தல்-கைவிடுதல். கையடை-அடைக்கலம். 319.19. வெங்கேதகை-வெவ்விய தாழம்பூ. முனிவார்-வெறுப்பவர். இயல்பு-சுரத்திற் சென்ற செய்தி. 320.20. மாதவம்-பெருந்தவம். கொள்வர்-பெறுவர். தோய்தல்-படிதல். அடுதல்-கொல்லுதல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்