| 9. திருவெங்கைக்கோவை |
|
| தலைமகன் பொழில்கண்டுவியத்தல் |
| |
| |
பிறப்பாம் வனம்புக் குழல்வார் தமக்குப் பெரிதுமுன்செய் அறப்பா லுதவுந் திருவெங்கை வாண ரடிநிழல்போல் உறப்பாலை செய்துய ரெல்லா மொழிய வொளியிழைதாழ் நிறப்பார மென்முலை யாய்பொழி லோவொன்று நேர்ந்ததுவே.
|
(321) |
| |
| தலைமகன் றலைமக ளசைவறிந்திருத்தல் |
| |
| |
ஆடும் பதத்தர் திருவெங்கை வாண ரதிகபுகழ் பாடுங் குமுதம் புனலூற வெய்ய பரிதியினால் வாடுங் கமல முகவேர் புலர மலர்ந்துதென்றல் ஓடுங் குளிர்தண் பொழிற்கே யிருந்தரு ளொண்ணுதலே.
|
(322) |
| |
| உவந்தலர்சூட்டி யுண்மகிழ்ந்துரைத்தல் |
| |
| |
எண்ணிய வெண்ண முடிப்பார்தம் வெங்கை யிமயவெற்பில் நுண்ணிய நூன்மருங் குற்கனி வாய்வின் னுதலியுன்றன் மண்ணிய நீல மணிவார் குழலின் மலர்புனையப் பண்ணிய புண்ணிய முன்னமென் னோவென்றன் பாணிகளே.
|
(323) |
| |
| கண்டோரயிர்த்தல் |
| |
| |
நந்தனும் வெள்ளை மதகரி வேந்து நறியவர விந்தனு முள்ளங் கசிந்தேத்தும் வெங்கை விமலர்தருங் கந்தனும் வள்ளியு மோவறி யேமிந்தக் காளையெழின் மைந்தனும் வள்ளிதழ்ப் போதணி வார்குழன் மங்கையுமே.
|
(324) |
| |
| கண்டோர் காதலின்விலக்கல் |
| |
| |
தாதை யனைய திருவெங்கை வாணர் தடஞ்சிலம்பில் சீதை யொடுவரு மாலனை யாயித் திருந்திழையாள் கோதை வெயிலிடைப் பட்டனை யாளெங் குடிலில்வைகி மாதை யுடன்கொண்டு நாளையுன் னூர்க்கு வழிக்கொள்கவே.
|
(325) |
| |
|
| |
321.21. அறப்பால்-அறப்பயன். உற-மிகுதியாக. பாரம்-பொறை. 322.22. ஆடும்பதத்தர்-திருக் கூத்தியற்றும் திருவடியை உடையவர். பாடுங்குமுதம்-வாய். வேர்-வியர்வை. ஓடுதல்-இயங்குதல். ஒண்ணுதல்-அன்மொழித்தொகை. 323.23. மண்ணிய-அலங்கரிக்கப்பட்ட. பாணிகள்-கைகள். என்னோ-யாதோ? 324.24. நந்தன்-சங்கையுடையவனாகிய திருமால். வெள்ளை மதகரி வேந்து-வெள்ளானையை உடைய இந்திரன். அரவிந்தம்- செந்தாமரை மலர். விமலர்-இயற்கையாகவே மலமற்றவர். 325.25. மால் அனையாய்-இராமபிரானைப் போன்றவனேகோதை-பூமாலை. வைகல்-தங்கல். வழிக்கோடல்-பயணப்படல்.
|
|
|
|