| 9. திருவெங்கைக்கோவை |
|
| நிமித்தம் போற்றல் |
| |
| |
பாவிரி மாபுகழ் வெங்கைபு ரேசர் பனிவரைமேல் பூவிரி வான்பொழில் காப்பதற்-காகப் பொருதிரைத்தண் காவிரி மாதை வருவித்த காக்கையுங் காக்குங்கொலோ மாவிரி மாகுழ னன்மாதை யீங்கு வரவழைத்தே.
|
(336) |
| |
| சுரந்தணிவித்தல் |
| |
| |
சங்கலைத் தொண்புன லூர்வய னாவற் றலைவனுக்குச் செங்கலைப் பொன்செய்த தென்வெங்கை வாணர் திருவருளால் பொங்கலைத் தண்புனற் காவிரி நாட்டிற் பொலிகநிறை அங்கலைத் திங்கண் முகமாது சென்ற வருஞ்சுரமே.
|
(337) |
| |
| தன்மகள் மென்மைத்தன்மைக் கிரங்கல் |
| |
| |
நோக்கக் குழையுஞ் சிலையாளர் வெங்கையி னுண்ணிடையார் மோக்கக் குழையு மனிச்சமென் பூவின் முகந்தருத்தித் தூக்கக் குழையும் பதங்கள்வெம் பாலைச் சுடுபரலில் தாக்கக் குழையுங் கொலோகுழை யாதெங்க டையலுக்கே.
|
(338) |
| |
| இளமைத்தன்மைக் குளமெலிந்திரங்கல் |
| |
| |
பேதைப் பருவ மிறந்தே பெதும்பைப் பிராயமுறும் போதைத் தொடங்கி மருண்மாலை போல்பவள் போனதென்னோ மாதைக் கலந்த விடத்தார் திருவெங்கை வாணர்வெற்பில் கோதைச் செழுங்கதிர் வேல்வேந் தொடுமக் கொடுஞ்சுரமே.
|
(339) |
| |
|
| |
336.36. பாவிரி-பாக்களில் விரிந்துகிடக்கிற. மாவிரி-வண்டுக்கூட்டம் போல விரிந்த. மாகுழல்-நீண்டகூந்தலையுடைய. காவிரிமாது-காவிரியாறாகிய பெண். 337.37. ஒண்புனல்-ஒள்ளியநீர். நாவல் தலைவனுக்கு.-சுந்தரமூர்த்தியடிகளுக்கு. 338.38. நோக்கக் குழையுஞ்சிலை-பொன்மலை. சிவபிரானுடைய கண் நெருப்பாகையாலும் நெருப்பைக்காணிற் பொன் குழைதலியல்பாகலானும் ‘நோக்கக் குழையுஞ் சிலையாளர்’ என்றார். 339.39. பேதைப் பருவம்-ஏழுவயதுப் பருவம். பெதும்பைப் பருவம்-ஒன்பது வயதுப் பருவம். மருண்மாலை-மயக்கத்தைச் செய்கின்ற மாலைக்காலம்.
|
|
|
|