| 9. திருவெங்கைக்கோவை |
|
| மிக்கோ ரேதுக்காட்டல் |
| |
| |
சேவிற் பிறங்குங் கொடிவெங்கை வாணர் சிலம்பணங்கே பூவிற் பிறந்த பசுந்தேன் விரைவழி போந்தணுகும் மாவிற் கலது மலர்க்கேது செய்யுமவ் வாறெனவே ஏவிற் சிறந்த விழியா ணமக்குமென் றெண்ணுகவே.
|
(344) |
| |
| செவிலியெயிற்றியொடு புலம்பல் |
| |
| |
அள்ளி யளைந்து பசுந்தா தளியின மம்புயமென் பள்ளி யுறங்குந் திருவெங்கை வாணர் பனிவரையாள் வள்ளி நடந்த வழிதூர்ந் திடாதவ் வழிநடந்தாள் கள்ளி படர்ந்த சுரத்தே வருமறக் காரிகையே.
|
(345) |
| |
| செவிலி குரவொடு புலம்பல் |
| |
| |
புரவே புரியுந் திருவெங்கை வாணர் புனையுமணி அரவே புரையு மகலல்கு லாளொ டனைதுயர வரவே தகுவதன் றென்றா யிலைமலர் வாய்திறக்குங் குரவே மொழிநல் குரவே நினக்கிது கூறுதற்கே.
|
(346) |
| |
| சுவடு கண்டிரங்கல் |
| |
| |
புலியோ டரவு தொழுங்கூத் துடையவர் பூவையர்கைப் பலியோ டுயிர்கவர் வெங்கைபு ரேசர் பனிவரைமேல் மலியோ தியினிசை வண்டுபண் பாடுறும் வஞ்சியடி கலியோ முனஞ்செலும் வெள்ளடி யோடு கலந்ததுவே.
|
(347) |
| |
|
| |
344. சே-இடபம். பிறங்கல்-விளங்கல். சிலம்பு-மலை. அணங்கு-பெண். விரை-மணம். அணுகல்-சேர்தல். மா-வண்டு. ஏ-அம்பு. 345. அளைதல்-பூசுதல். தாது-மகரந்தம். பள்ளி-படுக்கை. மறக்காரிகை-மறப்பெண். 346. புரவு-புரத்தல், காத்தல். புனைதல்-தரித்தல். மணி-மாணிக்கம். துயர்தல்-துன்புறல். நல்குரவு-வறுமை. குர-குரா. 347. புலி-வியாக்கிரபாதர். அரவு-பதஞ்சலி முனிவர். ஓதி-கூந்தல்.
|
|
|
|