| 9. திருவெங்கைக்கோவை |
|
| செவிலி கலந்துடன் வருவோர்க் கண்டுகேட்டல் |
| |
| |
வேண்டா ருயிர்கவர் செவ்வே லிறைவனு மெல்லியலும் மீண்டா ரெனவுண் மகிழ்ந்துநின் றேன்மலர் வேதன்முதல் மாண்டா ரெலும்பணி வெங்கைபு ரேசர் மணிவரைமேல் தூண்டா விருஞ்சுடர் போல்வரு வீரெதிர் தோன்றுறவே.
|
(348) |
| |
| அவர் புலம்பறேற்றல் |
| |
| |
என்னூர் பெயரவ் விளங்கா ளையுமிவ் விலங்கிழையாள் தன்னூர் பெயர்நும் பிணைவிழி யாளுந் தனிவினவிப் பொன்னூ புரவடி வஞ்சிபங் காளர் பொருந்துகொடி மின்னூர் முகிலுறங் கும்பொழில் சூழ்வெங்கை மேவினரே.
|
(349) |
| |
| செவிலி புதல்வியைக் காணாது கவலைகூர்தல் |
| |
| |
சேணா டியமதில் வெங்கைபு ரேசர் செழுஞ்சிலம்பில் மாணா வலர்மொழி வார்க்கேது சொல்வனென் வாய்திறந்து நாணா தினியெங்ஙன் மீண்டுட னன்னகர் நான்புகுவேன் காணா மருங்கு லொருமாதை யாற்றிடைக் கண்டிலனே.
|
(350) |
| |
மீட்சி தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல் |
| |
| |
கூனும் பிறையொன் றணிவார்தம் வெங்கைக் குளிர்சிலம்பில் ஊனுங் குருதியுந் தோய்வடி வேல னொருவனொடு மானுங் கயலும் பணிவிழி யாளரி மாவழங்கு கானுங் கரைபொரு கான்யாறுங் குன்றுங் கடந்தனளே.
|
(351) |
| |
|
| |
348. வேண்டார்-பகைவர். மீளல்-திரும்பல். உள்-மனம்; ஆகுபெயர். தூண்டா-தூண்ட வேண்டாத. இருஞ்சுடர்-பெருவிளக்கு. 349. பொன்நூபுரம்-பொன்னாலியன்ற சிலம்பு. இளங்காளை-என்றது தலைமகனை. இலங்கிழையாள் என்றது தன் மனைவியை. பிணைவிழியாள் என்றது தலைவியை. 350. சேண் ஆகுபெயர். நாடல்-தேடல். மாணாவலர் என்றபடியால் இழிவாகிய அலரெனலாயிற்று. 351. பணி-வணங்குதற்குரிய. அரிமாவழங்கு-சிங்கங்கள் இயங்குகின்ற. கான்யாறு-காட்டாறு, அரிமா இருபெயரொட்டு பண்புத் தொகை.
|
|
|
|