| 9. திருவெங்கைக்கோவை |
|
| தலைவன் றம்மூர்:சார்ந்தமை சாற்றல் |
| |
| |
சேய்விளை யாடுந் திருமார்பர் வெங்கைச் செழுஞ்சிலம்பில் நீவிளை யாடுஞ் சுனையீது நாண்மலர் நீபறிப்ப மாவிளை யாடும் பொழிலது காணிள மந்திமுதிர் வேய்விளை யாடுமவ் வெற்பேநம் வெற்பு விளங்கிழையே.
|
(352) |
| |
| தலைவி முன்செல்வோர் தம்மொடு தான்வரல் பாங்கியர்க்குணர்த்தி விடுத்தல் |
| |
| |
வேலையிற் றோன்றுநஞ் சுண்டோன் றிருவெங்கை வெற்பிலளி சோலையிற் பாடுமெம் மூர்புகு வீரிது சொன்மினறு மாலையிற் றோன்றுங் கதிர்வே லவனொடு மாவழங்கு பாலையிற் போயின மாதுவந் தாளென்று பாங்கியர்க்கே.
|
(353) |
| |
| ஆங்கவர் பாங்கியர்க்குணர்த்தல் |
| |
| |
வெளிறுந் தரள நகையீ ரரன்றிரு வெங்கைவெற்பில் களிறும் பிடியு முடங்குளைக் கோளரி கண்டுடைந்து பிளிறுஞ் சுரத்திடைப் புக்கநும் மாது பிறழுமின்போல் ஒளிறுங் கதிர்வடி வேலுடை யானொடிங் குற்றனளே.
|
(354) |
| |
| பாங்கியர் கேட்டு நற்றாய்க்குணர்த்தல் |
| |
| |
கீற்றுப் பிறையர் திருவெங்கை வாணர் கிரியிலன்னே கூற்றுக் குடித்த வுயிர்மீண் டெனத்தன் கொழுநனொடு வேற்றுப் புலத்தினின் றுற்றா ளெனச்சிலர் மெய்யுரைத்தார் ஆற்றுப் படுத்துன் மனத்தே யிருந்த வருந்துயரே.
|
(355) |
| |
| நற்றாய் கேட்டவனுளங்கோள் வேலனை வினாதல் |
| |
| |
கைக்கா லசூலத்தர் வெங்கையி லேநற் கடவுடர முக்கா லமுமுணர்ந் தீருல காளு முடிமன்னவன். மைக்கா வியங்கண் மடமா துடனெம் மனைவ ருமோ தக்கார் புகழ்தன் மனைபுகு மோவென்று சாற்றுமினே.
|
(356) |
| |
|
| |
352. சேய்-முருகக் கடவுள். நாள்-புதுமை. பறித்தல்-கொய்தல். மந்தி-குரங்கு. வேய்-மூங்கில். விளங்கிழை-அன்மொழித் தொகை. 353. நஞ்சு என மேல் வருதலால் வேலை ஈண்டு பாற்கடலை உணர்த்தியது. வேலை-கடல்; இது வேலா என்னும் வடசொல் திரிபென்பர். மா-விலங்கின் பொது. 354. வெளிறும்-வெளுத்த. முடங்கு-வளைத்த. நகை-பல். உளை-புறமயிர். கோளரி-ஆண் சிங்கம் உடைத்தல்-மனங்கலங்கல். பிளிறல்-பேரிரைச்சலிடல். பிறழ்தல்-மின்னுதல். ஒளிறல்-மிக்குவிளங்குதல். 355. வேற்றுப்புலம்-பாலைநிலம். நின்று ஐந்தாவதன் சொல்லுருபு. அருந்துயர்-பொறுத்தற்கரிய துன்பம். ஆற்றுப்படுத்து-தணிப்பாயாக. 356. கால குலம்-நமணைப் போன்று குலம். உவசாளு முடிமன்னவள் என்றதுதலைமகனை, மடமாது-தலைமகள்,
|
|
|
|