முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தலைவன் றம்மூர்:சார்ந்தமை சாற்றல்
சேய்விளை யாடுந் திருமார்பர் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
நீவிளை யாடுஞ் சுனையீது நாண்மலர் நீபறிப்ப
மாவிளை யாடும் பொழிலது காணிள மந்திமுதிர்
வேய்விளை யாடுமவ் வெற்பேநம் வெற்பு விளங்கிழையே.
(352)
தலைவி முன்செல்வோர் தம்மொடு தான்வரல் பாங்கியர்க்குணர்த்தி விடுத்தல்
வேலையிற் றோன்றுநஞ் சுண்டோன் றிருவெங்கை வெற்பிலளி
சோலையிற் பாடுமெம் மூர்புகு வீரிது சொன்மினறு
மாலையிற் றோன்றுங் கதிர்வே லவனொடு மாவழங்கு
பாலையிற் போயின மாதுவந் தாளென்று பாங்கியர்க்கே.
(353)
ஆங்கவர் பாங்கியர்க்குணர்த்தல்
வெளிறுந் தரள நகையீ ரரன்றிரு வெங்கைவெற்பில்
களிறும் பிடியு முடங்குளைக் கோளரி கண்டுடைந்து
பிளிறுஞ் சுரத்திடைப் புக்கநும் மாது பிறழுமின்போல்
ஒளிறுங் கதிர்வடி வேலுடை யானொடிங் குற்றனளே.
(354)
பாங்கியர் கேட்டு நற்றாய்க்குணர்த்தல்
கீற்றுப் பிறையர் திருவெங்கை வாணர் கிரியிலன்னே
கூற்றுக் குடித்த வுயிர்மீண் டெனத்தன் கொழுநனொடு
வேற்றுப் புலத்தினின் றுற்றா ளெனச்சிலர் மெய்யுரைத்தார்
ஆற்றுப் படுத்துன் மனத்தே யிருந்த வருந்துயரே.
(355)
நற்றாய் கேட்டவனுளங்கோள் வேலனை வினாதல்
கைக்கா லசூலத்தர் வெங்கையி லேநற் கடவுடர
முக்கா லமுமுணர்ந் தீருல காளு முடிமன்னவன்.
மைக்கா வியங்கண் மடமா துடனெம் மனைவ ருமோ
தக்கார் புகழ்தன் மனைபுகு மோவென்று சாற்றுமினே.
(356)

352. சேய்-முருகக் கடவுள். நாள்-புதுமை. பறித்தல்-கொய்தல். மந்தி-குரங்கு. வேய்-மூங்கில். விளங்கிழை-அன்மொழித் தொகை. 353. நஞ்சு என மேல் வருதலால் வேலை ஈண்டு பாற்கடலை உணர்த்தியது. வேலை-கடல்; இது வேலா என்னும் வடசொல் திரிபென்பர். மா-விலங்கின் பொது. 354. வெளிறும்-வெளுத்த. முடங்கு-வளைத்த. நகை-பல். உளை-புறமயிர். கோளரி-ஆண் சிங்கம் உடைத்தல்-மனங்கலங்கல். பிளிறல்-பேரிரைச்சலிடல். பிறழ்தல்-மின்னுதல். ஒளிறல்-மிக்குவிளங்குதல். 355. வேற்றுப்புலம்-பாலைநிலம். நின்று ஐந்தாவதன் சொல்லுருபு. அருந்துயர்-பொறுத்தற்கரிய துன்பம். ஆற்றுப்படுத்து-தணிப்பாயாக. 356. கால குலம்-நமணைப் போன்று குலம். உவசாளு முடிமன்னவள் என்றதுதலைமகனை, மடமாது-தலைமகள்,

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்