முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தலைமகடன்னைத்தலைமகன் விடுத்தல்
செருகிக் கிடந்த மதிவே ணியர்திரு வெங்கைவெற்பில்
சருகிற் புகுஞ்சுழல் காற்றாகு வன்பகைச் சார்வினரேல்
குருகிற் சிறந்தகைத் தோசாய் நுமரைக் கொலாமையினால்
அருகிற் செலவஞ்சு வேனிற்க நீயிவ் வதரிடையே.
(366)
தமருடன் செல்பவளவன்புறநோக்கிக் கவன்றரற்றல்
கன்மலை யென்னினு மவ்வேடர் பெய்யுங் கணைமழைக்கிங்
கென்மலை யென்னும் பயத்தோர்க் கிடந்தரு மிம்மலைதான்
பன்மலை யென்னு மணிமாட வெங்கைப் பழமலைவாழ்
பொன்மலை வெள்ளி மலைபோற் பொலிக புகழ்படைத்தே.
(367)
வரைதல்
சென்றோன் மீண்டுவந் தந்தணர்சான்றோரைமுன்னிட் டருங்கலந் தந்துவரைந்துழிக் கண்டோர்சாற்றல்
கருவே ரறுக்குந் திருவெங்கை வாணர்க்குங் கற்புமைக்கும்
அருவேள்வி நன்மணஞ் செய்துசெம் பாதிமெய் யாயினவால்
வருவேத நன்னெறி தான்வழு வாமன் மணம்புணர்ந்து
பொருவே லிறைவற்கு நன்மா தினுக்குமெய் பூரித்தவே.
(368)

366. சுழற்காற்று-சூறைக்காற்று. குருகு-வளையல் நுமர்-நும்மவர். தோகை: இருமடியாகு பெயர். 367. மலையென்னும் புயத்தோர்-தலைவர். மணி மாடம்-மணிகள் பதிப்பிக்கப்பட்ட மாளிகைகள். 368. கரு-பிறவி. வேர் அறுத்தல்-அடியோடொழித்தல். மெய்-பொய்யாகிய உடலை மெய் என்றது மங்கலவழக்கு. புரித்தல்-நிரம்பல்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்