| 9. திருவெங்கைக்கோவை |
|
| தலைமகடன்னைத்தலைமகன் விடுத்தல் |
| |
| |
செருகிக் கிடந்த மதிவே ணியர்திரு வெங்கைவெற்பில் சருகிற் புகுஞ்சுழல் காற்றாகு வன்பகைச் சார்வினரேல் குருகிற் சிறந்தகைத் தோசாய் நுமரைக் கொலாமையினால் அருகிற் செலவஞ்சு வேனிற்க நீயிவ் வதரிடையே.
|
(366) |
| |
| தமருடன் செல்பவளவன்புறநோக்கிக் கவன்றரற்றல் |
| |
| |
கன்மலை யென்னினு மவ்வேடர் பெய்யுங் கணைமழைக்கிங் கென்மலை யென்னும் பயத்தோர்க் கிடந்தரு மிம்மலைதான் பன்மலை யென்னு மணிமாட வெங்கைப் பழமலைவாழ் பொன்மலை வெள்ளி மலைபோற் பொலிக புகழ்படைத்தே.
|
(367) |
| |
வரைதல் சென்றோன் மீண்டுவந் தந்தணர்சான்றோரைமுன்னிட் டருங்கலந் தந்துவரைந்துழிக் கண்டோர்சாற்றல் |
| |
| |
கருவே ரறுக்குந் திருவெங்கை வாணர்க்குங் கற்புமைக்கும் அருவேள்வி நன்மணஞ் செய்துசெம் பாதிமெய் யாயினவால் வருவேத நன்னெறி தான்வழு வாமன் மணம்புணர்ந்து பொருவே லிறைவற்கு நன்மா தினுக்குமெய் பூரித்தவே.
|
(368) |
| |
|
| |
366. சுழற்காற்று-சூறைக்காற்று. குருகு-வளையல் நுமர்-நும்மவர். தோகை: இருமடியாகு பெயர். 367. மலையென்னும் புயத்தோர்-தலைவர். மணி மாடம்-மணிகள் பதிப்பிக்கப்பட்ட மாளிகைகள். 368. கரு-பிறவி. வேர் அறுத்தல்-அடியோடொழித்தல். மெய்-பொய்யாகிய உடலை மெய் என்றது மங்கலவழக்கு. புரித்தல்-நிரம்பல்
|
|
|
|