1. சோணசைலமாலை |
|
|
கார்தரு சுருண்மென் குழற்சிறு நுதற்பூங் கணைபுரை மதாரிக் கருங்கண் தார்தரு குவவுக் கொங்கைநுண் மருங்குற் றையலார் மையலென் றொழிவேன் சீர்தரு மணியி னணிந்தன வெனக்கட் செவியுமொண் கேழலின் மருப்புஞ் சார்தரு முலக விளக்கெனுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(24) |
|
|
நந்துகைத் தலத்து நாரணற் கயற்கு நவமணிக் கரகநீ ரிருந்தும் மைந்துறக் குறித்து மாட்டியுங் காண்பான் மதித்திடா துனையெதிர்ந் திலரே ஐந்துகைத் தனிக்கோட் டொருபெருங் களிறு மறுமுகம் படைத்த கேசரியுந் தந்தெமைப் புரக்குங் கருணைகூர் சேரண சைலனே கைலைநா யகனே.
|
(25) |
|
|
வினையரும் புகலிக் கிறைமணப் பந்தர் விருந்தினுக் குதவிலேன் முந்திற் றுனையிரந் திடுவான் வந்தனன் பதநீ யுதவியென் றுயரொழித் தருளாய் இனியபைந் தமிழின் பொதியமால் வரைபோ லிசைக்குரு காதிம மலையின் தனையையின் றீஞ்சொற் குருகுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(26) |
|
|
|
24. அணியின்-அணிபோல. அக்கினி மலையாதலின் உலக விளக்கென்றார்; உயிர்க்குயிராய்நின்று உணர்த்துஞ்சோதி என்றலுமாம். கட்செவி-பாம்பு. தார்-மாலை. குவவு-பெருத்த குழலையும் நுதலையும். இருகண்ணையும்; கொங்கையையும், மருங்குலையும் உடைய தையலார் என உம்மை விரிக்க. 25. நாரணற்கு நந்தும் அயற்குக் கரகநீரும் என உம்மை விரிக்க. குறித்தல்-ஊதுதல்.நந்து-சங்கு. மைந்து-வலிமை. கேசரி-சிங்கம். ஐந்துகைத்தனிக் கோட்டொரு பெருங்களிறு-ஆனைமுகக்கடவுள். 26. அரும்-அருமை; இன்மை. மணவிருந்திற்கு வரவில்லை, உன்னிடத்திரப்பதற்காக வந்தனன். உணவினைக் கொடுத்துக் காப்பாற்றுவாயாக என்று மற்றொரு பொருளுங் கொள்க. பதம்-பாதம்(முத்தி); உணவு. புகலிக்கிறை-திருஞானசம்பந்தர். தனையை-மகள்.
|
|
|
|