முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
பாயும்வெண் டிரைப்பே ராழிசூ ழுலகிற்
      பழமொழி யொழியமெய் யடியார்
ஆயுமென் மலரோர் மலையள வணிய
      வமர்ந்தநின் கோலம்யான் மறவேன்
தூயவெண் மதியிற் களங்கமென் றுரைப்பச்
      சூழ்பசுங் கொடிபயி லுருவச்
சாயைசென் றுறநின் றிலங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(30)
நடமிடு பசும்பொற் புரவிமேற் கொண்டு
      நளினமென் மலர்க்கரத் தெறிபூம்
படையொடு துரந்து வந்துமென் விடயப்
      பகைப்புலி தனையெறிந் திலையே
அடிநடு நிழல்சென் றெழுகட லடைய
      வகல்பெரும் புறத்துவா ரிதியில்
தடமுடி நிழல்சென் றுறவளர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(31)

30. பழமொழியாவது-மலையளவு சுவாமிக்குத் தினையளவு புட்பம் என்பது. அம்மொழியகல மலையளவாயுள்ள இக் கடவுளுக்குப் பல மலையளவாகவே மலர்களைச் சாத்துவரென அடியவரது புட்பப் பணியின் மிகுதி குறித்தபடி. மதியில் சாயையுற என்க. 31. குதிரை வீரராதல் உமக்கியற்கையேயாகவும் அங்ஙனமே ஆரோகணித்து வந்தும் எறிந்தீரில்லை; இனியேனும் எறிவீராகவென்பது.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்