10. திருவெங்கைக் கலம்பகம் |
|
குறள்வெண் செந்துறை |
|
|
விண்ட பூமுடி வெங்கை புரத்தனைக் கண்ட மாதர் பெறுவது காமமே.
|
(78) |
|
மதங்கு, எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
|
|
காவி கொண்ட களத்தர் வெங்கை புரத்தர் தங்கழல் பாடியே வாவி கொண்ட மலர்ப்ப தங்கள் சிவப்ப வாடு மதங்கிதான் நீவி கொண்டு முலைத்த டங்கண் மறைத்தி லாளெனி னிற்குமோ ஆவி கொண்டிடு மிங்கி தற்குமு னென்று காளைய ரயர்வரே.
|
(79) |
|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
|
அயன்கொளுங் கவின்கூர் வெங்கை யமலன்றன் வரத்தா லன்றி வியன்கொளுங் கவினான் மற்றோர் மெல்லியல் சேர்வோ னன்றே நயன்கொளுந் தவமென் செய்தா ணகமக ளெனத்தன் காதல் பயன்கொளும் படிப கர்ந்து பரிகுவண் மாதர் மாதே.
|
(80) |
|
நேரிசை வெண்பா |
|
|
மாதா வயிராமன் மற்றோர் பொருள்குறித்து வேதா வறியாத வெங்கைபுரத் - தாதாவை அப்பாவா வீட்டிற் கடியேன்சொற் கம்பெறவென் றிப்பாவை கூறு மிரந்து.
|
(81) |
|
|
|
78. விண்ட-மலர்ந்த. பூமுடி-பூவை முடிக்கும். 79. காவி கொண்ட-கருங்குவளை மலரையொத்த. களத்தர்-கழுத்தையுடையவர். நீவி கொண்டு-ஆடையைக் கொண்டு. ஆவி-உயிர். அயர்வர்-சோர்வர். 80. அயன்கொளும்-நான்முகன் மற்றைய நகரங்களைப் படைப்பதற்கு மாதிரியாகக் கொள்ளும். கவின்கூர்-அழகு பொருந்திய. நயன்-விருப்பம். நகமகள்-மலைமகள். 81. அயிராமல்-ஐயப்படாமல். வேதா-நான்முகன். சொர்க்கம்-வீடு பேறு ; தனம். பாவை-பாவை போல்வாள்.
|
|
|
|