முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
குறள்வெண் செந்துறை
விண்ட பூமுடி வெங்கை புரத்தனைக்
கண்ட மாதர் பெறுவது காமமே.
(78)
மதங்கு, எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
காவி கொண்ட களத்தர் வெங்கை புரத்தர் தங்கழல் பாடியே
வாவி கொண்ட மலர்ப்ப தங்கள் சிவப்ப வாடு மதங்கிதான்
நீவி கொண்டு முலைத்த டங்கண் மறைத்தி லாளெனி னிற்குமோ
ஆவி கொண்டிடு மிங்கி தற்குமு னென்று காளைய ரயர்வரே.
(79)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
அயன்கொளுங் கவின்கூர் வெங்கை
       யமலன்றன் வரத்தா லன்றி
வியன்கொளுங் கவினான் மற்றோர்
       மெல்லியல் சேர்வோ னன்றே
நயன்கொளுந் தவமென் செய்தா
       ணகமக ளெனத்தன் காதல்
பயன்கொளும் படிப கர்ந்து
       பரிகுவண் மாதர் மாதே.
(80)
நேரிசை வெண்பா
மாதா வயிராமன் மற்றோர் பொருள்குறித்து
வேதா வறியாத வெங்கைபுரத் - தாதாவை
அப்பாவா வீட்டிற் கடியேன்சொற் கம்பெறவென்
றிப்பாவை கூறு மிரந்து.
(81)

78. விண்ட-மலர்ந்த. பூமுடி-பூவை முடிக்கும். 79. காவி கொண்ட-கருங்குவளை மலரையொத்த. களத்தர்-கழுத்தையுடையவர். நீவி கொண்டு-ஆடையைக் கொண்டு. ஆவி-உயிர். அயர்வர்-சோர்வர். 80. அயன்கொளும்-நான்முகன் மற்றைய நகரங்களைப் படைப்பதற்கு மாதிரியாகக் கொள்ளும். கவின்கூர்-அழகு பொருந்திய. நயன்-விருப்பம். நகமகள்-மலைமகள். 81. அயிராமல்-ஐயப்படாமல். வேதா-நான்முகன். சொர்க்கம்-வீடு பேறு ; தனம். பாவை-பாவை போல்வாள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்