11. திருவெங்கையுலா |
|
|
25 அருந்தவர்க ளென்று மமரரென்றும் பேரிட் டிருந்தவர்க ளெல்லா மிரப்பப் - பொருந்தி முனியா தவர்க்குவர முற்றங் கொடுத்திங் கினியார் வரவென் றிருப்பான் - நினையாமல் வேத வுணவு வெறுத்துப் புகழ்மூவர் ஒதுதமி ழூணுக் குழல்செவியான் - தாதையிகழ் காலிற்குத் தக்க கணிச்சிகைச் சண்டிசொரி பாலிற்குத் தக்க பழமலையான் - சாலிக்குக் கைக்கரகத் துற்றிழியுங் காவிரிபோற் சென்றுநறுஞ் செக்கரிதழ்த் தாமரையின் றேன்பாய - வக்கமல
|
(26) |
|
|
30 ஏடு கனலா யிடுபசும்பொ னொண்பொகுட்டாய் மூடு கரியரியாய் மொய்த்ததடம் - பீடுபெற ஞாலங் கருதுஞ்செஞ் ஞாயிற் றிரும்பகன்மால் கோலங் கருதுங் குளிர்பொழில்வாய்க் - காலங் கருதி யிருளிருப்பக் கட்செவிமா ணிக்கம் பரிதியென நின்று பருகக் - குருதிபுரை சேயொளிய பூண்மணிசூழ் திண்சுவர்முற் றுங்கவரின் வாயி றெரிபளிக்கு மாடமுறத் - தூயசுதை மாடநம் பிக்கு வழிவிடுவான் விண்ணெழுந்து நீடு புனல்போல நின்றிலங்கப் - பாடநகர்
|
(31) |
|
|
|
26.25-30. அமரர்-தேவர்கள். முனியாது-சினவாமல். இனையாமல்-வருந்தாமல். தமிழ்ஊண்-தேவாரப் பாடல்கள். உழல் செவியான்-ஏங்குகிற காதுகளையுடையவன். கணிச்சி-மழு. சண்டி-சண்டேசுரர். சாலி-நெற்பயிர். செக்கர் இதழ்-சிவந்த இதழ். கமலம்-தாமரை.31.30-35. பொகுட்டு-தாமரை மொட்டு. அரி-வண்டு. பீடுபெற-பெருமையை அடைய. கருதும்-எண்ணும். பரிதி-கதிரவன். குருதிபுரை-உதிரத்தைப்போன்ற. சேயொளி-செந்நிற வொளி.
|
|
|
|