முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
35    இந்திரனுக் கன்றிங் கெனக்கென்று வேளசைத்த
     பைந்தழைய தோரணம்விண் பாலசைய - வந்தணையில்
     நாயகனா னீக்குதுயி னங்கை விளக்கவிப்ப
     மேய மணிப்பூண் விளக்கேற்றச் - சேயிழையார்
     முன்றிற் றுகண்மாற்ற மொய்குழலிற் பூந்தொடைகள்
     அன்றித் துகளா லதுநிரப்ப - மன்றில்
     கொழுநன்சொன் மாதுகிளி கூறா தடக்கப்
     பழகுமயற் பூவை பகர - வெழிலி
     மறைத்திருந்து செல்லமணி மாளிகையை வேத
     முறைத்திருந்து தீப்புகைபோய் மூட - நறைத்திருந்து
(36)
40    செந்தா மரைநாதன் றேரிற் பதாகையொடு
     நந்தா மதிற்கொடிக ணட்பாடப் - பந்தாடும்
     மங்கையர்கள் செங்கை வளையொலிப்ப வேர்மலியும்
     வெங்கை நகரிருப்பு வேண்டியே - பங்குபடு
     பெண்ணாசை நம்பிபசும் பொன்னாசை பெற்றவுளம்
     மண்ணாசை தானு மருவுதலால் - விண்ணாசை
     கொள்ளுஞ் சிறப்புக் கொடுப்பத் திருவுளங்கொண்
     டெள்ளுங் குறியவுரு வின்றுபொய்த் - தெள்ளுங்
     கனவு நனவுபோற் காட்டி யிரந்து
     மனைவியுமை யோடு மணந்து - வினவினர்க்குப்
(41)
45    பண்டை யறத்தின் படிவமிது வென்னவுருக்
     கொண்டவிலிங் கையன் குலமைந்தன் - உண்ட
     படிதாங்கி மாயன்றேர்ப் பார்தாங்கி யாங்கெம்
     குடிதாங்கி நல்லிசைமென் கோதை - முடிதாங்கு
     கல்வி யுறநீல கண்டன் றுணைவனலர்ச்
     செல்வி யுறையுந் திருமார்பன் - வல்விரகம்
     பூண்ட மடந்தையரே பொல்லா னெனுநல்லான்
     தூண்டு திகிரிச் சுமைதுறந்தான் - யாண்டும்
     இலையென்றல் கேட்பவுமின் னாதென் றிரப்போர்
     நிலைகண்டாங் கெப்பொருளு நேர்வோன் - அலையுண்டு
(46)

36.35-40. பைந்தழைய-பசிய தழைகளாலாகிய. பூண் விளக்கு-அணிகலன்களின் ஒளியே விளக்காக. அன்றுதல்-பகைத்தல். 41.40-45. செந்தாமரைநாதன்-கதிரவன். நந்தா-கெடாத. ஏர்மலியும்-அழகு மிகும். பங்குபடு-பழுது பொருந்திய. படிவம்-வடிவம். 46.45-50. நீலகண்டன்-கரிய கழுத்தையுடைய சிவபிரான்-விரகம்-காதல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்