முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
50    பாலாழிக் கின்றுநிலை பான்மதிக்கென் றொப்பிகந்து
     தோலா துலகனைத்துஞ் சூழ்புகழான் - மேலாய
     செங்கமல வாணற்கே செந்நாவின் மேவுதல்வெண்
     மங்கையெனு மவ்வுரையை மாற்றியே - சங்கையற
     மூவுலகு ளோர்க்குமுதுசீர்த்தி வெண்மங்கை
     நாவுறைய வைத்த நலத்தினான் - தேவிகலி
     வந்துதன்சீர் பாடுநரை மண்மீதி லந்நிலையே
     இந்திரன்றா னாக்கு மியல்பினான் - நிந்தையற
     உண்டு பணையலரென் றொண்காவைக் கீழ்ப்படுத்திக்
     கொண்டு புரைதீர் கொடையினான் - கண்டுபுகழ்
(51)
55    பண்பு மலாது பயனும் புணர்ந்துநிதித்
     தண்பதுமம் வென்ற தடக்கையான் - வண்புலவர்
     தம்மைவிழி காக்குந் தகவி னிமைபோலச்
     செம்மை பெறக்காக்குஞ் சீருடையான் - மெய்ம்மைபெற
     நல்லா ரொருவ ருளரே லவர்பொருட்டால்
     எல்லார்க்கும் பெய்யுமழை யென்றுமுனஞ் - சொல்லாடும்
     ஐய மகல வகிலமெலாந் தற்சுட்டிப்
     பெய்யுமழை யென்னும் பெயராளன் - துய்ய
     மறையோர் மிடிப்பகைஞன் வாய்மைநா மென்றும்
     அறையோ மெனப்பொய் யறைவான் - முறையோதி
(56)
60    வேலிபுறஞ் செய்ய விளைத்துக் கரும்பயிலக்
     கூலி கொடுக்குங் குலத்தோன்றல் - மாலிரவும்
     ஆர்த்தி விருந்தா லடையாக் கதவழகு
     மாத்திரையாய் நின்றொளிரும் வாய்தலான் - பூத்தபொருள்
     ஏதப் படாம விருந்துதவ நல்லறமென்
     பூதப் படியுட் புதைக்கின்றோன் - வேதன்
     நிலம்பெயர்த்து வைத்த நெடுவேரிற் சென்னி
     குலம்பெயர்த்து வைத்த குணத்தான் - தலம்படைத்தோன்
     கண்ட குலத்திற் கருதி னிரட்டியாம்
      பண்ட குலத்தின் பயனானான் - மண்டலிகர்
(61)
65    நல்லகோ லின்று நவைக்கோ லெனச்செயுங்கோல்
     வல்லகோ லண்ணா மலைவள்ளல் - மல்லலுறச்
     சந்தி பொருத்தித் தகுஞ்சீர் கெடாதடுக்கிப்
     புந்தி மகிழற்புதவணித்தா - முந்தையோர்
     செய்யுள்போற் செய்த திருக்கோயி லுள்ளிருந்தெம்
     பையுள்போக் கிற்கும் பரஞ்சோதி - மையுள்
     இருந்தபுன் மாக்கடமை யென்றுந் துதியா
     வரந்தரவென் முன்னின்ற வள்ளல் - வரைந்தவிடை
     
     பவனி
     
     தன்மதியி லென்றூழ் தனதுமதி காட்டியறப்
     பொன்மலியுங் கப்பம் புகவேற்றிச் - சொன்மலியும்
(66)

51.50-55. பாலாழி-பாற்கடல். தோலாது-தோற்காமல். செங்கமலவாணன்-நான்முகன். பணை-கிளை. புரைதீர்-குற்றம் போக்கிய. 56.55-60. நிதித்தண்பதுமம்-பதுமநிதி. தடக்கை-பெரிய கை. மிடிப்பகைஞன்-வறுமைக்குப் பகையாக இருப்பவன். 61.60-65. அயில-தின்ன. ஆர்த்திவிருந்து. மகிழ்ச்சியை உண்டாக்கும் விருந்து. சென்னி-சோழன். வாய்தல்-வாசல். ஏதம்-குற்றம். 66.65-70. பையுள்-துன்பம். மையுள்-மயலுக்குள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்