11. திருவெங்கையுலா |
|
|
85 என்ன மழுமா னியைந்த விரலல்ல மன்னமணி யாழி மலிவித்துத் - தன்னொழியக் கைசெய்த வீரக்குக் கட்டியதாய் முற்றாமல் மொய்செய்த காலன் முரண்முருக்கி - மைசெய்த மேனி யரக்கன் விறலோர் கணத்தழித்து வானி னடுத்த மதிதேய்த்துத் - தானுடைய வென்றிக் கணிந்ததென வீரக் கழனோன்றாள் ஒன்றிக் கிடப்ப வொளிர்வித்து - மன்றற் புகைமுதனின் றேந்திநறும் பூங்குவளைத் தீப வகைமுதல் கொண்டுபணி மாறித் - தகைமை
|
(86) |
|
|
90 வலக்க ணிடப்பா லிடக்கண் வலப்பாற் கலக்க நிழலாடி காட்டி - நிலக்கலமும் பொற்கலமு மன்ன மறையும் புகழ்மூவர் சொற்களையு மொத்துத் துதிப்பவிருந் - தற்கதிர்தன் அங்கந் திரண்டமுத தாரையொழுக் கானதெனத் தங்கு மணிப்பிடிய சாமரைகள் - அங்கசையச் சாந்தாற்றி பேர்முரணித் தாமரைமுத் தன்னவெயர் போந்தாற்றி ஞாங்கர்ப் பொலிவெய்த - வேந்தாற்றற் பிள்ளை மதியினைமுன் பெற்றெடுத்த தாய்மதிபோல் வெள்ளை மணிக்கவிகை மேனிழற்றத் - தொள்ளைவளை
|
(91) |
|
|
95 ஒன்றா யிரம்வா யொலிக்கு மவைபோன்று சென்றா யிரமெண் டிசைவிழுங்கக் - குன்றாத் திரண்டா யிரங்கை தெழிக்குமது போற்கை இரண்டான் முழவொன் றிரங்க - மருண்டார்நல் தந்திகரங் கொண்டதென நற்றண் ணுமைமுழங்கச் சந்தமறை யோன்விழையுந் தாளங்கள் - முந்ததிரக் கண்ணன் மலர்வாய்க் கழையெறிந்து பின்றொடர வண்ண விசைக்குழல்கள் வாய்த்தொலிப்ப - மண்ணியங்கள் ஏனையபா தாளத் திறையரவும் விண்ணரவும் வானுருமே றென்ன மலிந்தார்ப்ப - மீன
|
(96) |
|
|
|
86.85-90. மன்ன-பொருந்த. முரண் முருக்கி-வலிமையை அழித்து. மதி-திங்கள். நோன்றாள்-வலிமை பொருந்திய திருவடி. 91.90-95. நிழலாடி-கண்ணாடி; நிலக்கலம்-மண்ணாற் செய்தகலம். பொற்கலம்-பொன்னாற் செய்த கலம். மறை மண்பாத்திரமும் தேவாரம் பொன் பாத்திரமும் போன்றதென்க. “பூசுரர் நான்மறை மட்கலநிகர்க்கும்” என்பது நால்வர் நான்மணிமாலை. கவிகை-குடை. நிழற்ற-நிழலைச் செய்ய. 96.95-100. முழவு-மத்தளம். தண்ணுமை-ஒலிக் கருவிகளில் ஒன்று. கழை-வேய்ங்குழல். உருமேறு-பேரிடி.
|
|
|
|