11. திருவெங்கையுலா |
|
|
100 அலைப்புதல்வி போற்றபெரி யம்மைப் பெயர்கொள் மலைப்புதல்வி தன்கொழுநன் வந்தான் - தொலைப்பில் முதுகுன்றம் வெங்கையென முன்னுங் கருணை மதகென்ற கண்ணுடையான் வந்தான் - இதுகுன்றம் என்னு மழவிடையான் வந்தா னெனக்கோடி சின்ன மமுதஞ் செவிக்குகுப்ப - மன்னுசிவ செந்துவர்வாய் மங்கைபங்க தேவாதி தேவவென வந்திகர்நின் றார்க்குமொலி வானளப்பப் - பந்திமணி மாடக் கரைசேர் மறுகிலஞ்சி மன்பதையா நீடப் புதுநீர் நிறைந்தொலிப்ப - ஆடச்
|
(101) |
|
|
105 சிலர்செந் தழற்கொழுந்து சேட்போய் விழல்போற் பலர்செந் துகிலெறிந்து பற்ற - மலர்சிந்தி உம்பர்மே னிற்ப வுலகநெருக் கரலுயர்த்த தம்பதுமக் கையெளிதிற் றாங்குவிப்பச் - செம்பொனெடுந் தண்டுமிசை கொண்டு சகமீன்றா டன்னையுடன் கொண்டுமணி வீதி குறுகியே - பண்டு சிலையாகி நொய்துபட்ட தீதகல மேரு மலையாகி நின்றவா வந்த - நிலையாகி நாரணனாய் விண்ணுயர்வா னன்னிறத்தாற் செங்கமல ஆரணனாய் மிக்க வணியினால் - வாரணனாய்
|
(106) |
|
|
110 நின்ற பசும்பொ னெடுந்திருத்தேர்க் கண்டுவந்து மன்ற விளங்கதிர்போல் வந்தேறி - வென்றிதரு தந்தி முகன்முருகன் சங்கரிநற் சண்டியிவர் தந்த மரபிரதந் தாங்கடவி - வந்தணையக் கட்டளைக்கற் பொன்னுரைபோற் காற்பொன் மறுகுரிஞ்ச முட்டிமுடிப் பொன்விண் முகடுரிஞ்சப் - பட்டுடைத்தேர் கண்டோர் விழிகள் களிப்ப நிலைபெயர்த்துத் திண்டோ ளிறைவன் செலுத்துதலும் - பண்டோர் குழாங்கள் சிரந்துணித்தா னோடமர்ப்பச் சென்மதற்கு வேதன் இருந்து படைத்தபடை யென்னத் - திருந்திழையார்
|
(111) |
|
|
|
101.100-105. 106.105-110. சேண்போய்-தொலைவிற்போய். உம்பர்-தேவர்கள். சிலை-வில். நாரணன்-திருமால். செங்கமல ஆரணன்-நான்முகன். வாரணன்-இந்திரன். 111.10-115. கட்டளைக்கல்-பொன்னுரைகல். காற்பொன்-தேர் உருளையின் பொன். மறுகு-தெரு. முடிப்பொன்-தேர்முடியின் பொன். முகடு-விண்முகடு. சிரந்துணித்தான்-நான்முகனுடைய தலையைக் கிள்ளியவன். அமர்ப்ப-போர் செய்ய. இருந்து-எண்ணி.
|
|
|
|