11. திருவெங்கையுலா |
|
|
115 முற்றினர்முற் றாதமுலையிற் பெருவாழ்வுஞ் சிற்றிடையி னல்குரவுஞ் சேர்ந்துளார் - முற்றும் அமைக்க நிகர்தோ ளணங்கா தலைத்தம் பிமைக்கம் விழியா லிறுப்பார் - சுமைக்கு வருந்து நுசுப்பென்று வாணுதலிற் றீட்டுந் திருந்து திலகஞ் சிதைப்பார் - பரந்தஞிமி றூதித் திரியும் பலமலரி னொண்மணம்போல் பேதித் தமையுமிகு பேரழகார் - மோதிக் கிழியா முகில்சிதைக்குங் கேதனப்பொற் றேரோன் அழியா வெரிதீ யழகை - விழியால்
|
(116) |
|
|
120 விழுங்கினா ரேது விளையா தினிமெய் புழுங்கினார் மாலை பொரிந்தார் - செழுந்தரள மாலை பொடிந்துவிழி வார்நீர் கலந்தொழுகிப் பாலைபொழி யார்பா ரதிபோன்றார் - மேலைநாட் கூற்றை முனிந்த குரைகழலு முப்புரத்தின் ஆற்றல் களைந்த வணிநகையும் - போற்றிலராய்த் தம்மைநோய் செய்த தறுகட் சிலைமதற்காய் வெம்மை விழியே வியந்திடுவார் - செம்மைத் தவங்கொண்டோ மாதுமையா டன்னழகு கொண்டோ எவன்கொண் டிடமளித்த தென்பார் - தவங்கொண்டேல்
|
(121) |
|
|
125 ஆக வழகா லளித்த திடமாகில் போகவிடே மென்றெதிர்தாம் போகுவார் - ஆகம் மருவு மதினெண் மடங்கு பிறைப்பேர் இரவி தனைமறைப்பி னென்பார் - பரவுறுபீர் கன்றுபயிர் மேயக் கடாவின் செவியரிந்தாங் கின்றுதலை வற்கா ணிணைவிழிகள் - நன்றிருப்பக் கொங்கை யழகழியக் கொண்டதென்பார் கொல்பவர்க்குச் சங்கரனென் னும்பேர் தகாதென்பார் - மங்கையுமை கொங்கைவடுக் கண்டுங் குழியவுரம் பாயாத எங்கண் முலைக்குவலி யில்லென்பார் - செங்குதலைப்
|
(126) |
|
|
|
116.15-120. முற்றினர்-வந்து திரண்டனர். அமை-மூங்கில். அம்பு இமைக்கும்-அம்பைப்போல் விளங்கும். இறுப்பார்-ஆடவரை வருத்துவார்கள். நுசுப்பு-இடை. ஞிமிறு-வண்டு. 121.120-125 பொரிந்தார்-தீயப்பெற்றார். பாரதி-கலைமகள். மெய்புழுங்கினார்-உடல் வருந்தினார். அணிநகை-அழகிய பல். 126.125-130. ஆகம்-மார்பு. இரவி-கதிரவன். குழிய-குழி விழுமாறு. உரம்-மார்பு.
|
|
|
|