11. திருவெங்கையுலா |
|
|
145 ஒக்கலையிற் கொள்ளி னொளிர்பொன் மணியிருப்பிற் றக்கவளல் லாரெடுக்கத் தக்ககிலாள் - மிக்க வடிவழகுக் கேற்ற மணவாளன் றானெப் படியுளனென் றாராயும் பண்பாள் - முடிவில் உருவழிந்த வேளை யுரியனெனக் கூறும் பொருவழிந்த வோர்கறையும் பூண்பாள் - திருவழங்கு பொன்னே யெழின்முளையே பூங்கொடியே பெண்ணரசே மின்னே மயிலே விழிமணியே - அன்னே வருக வருகவென வாராது தாய்நெஞ் சுருக வுருக வுழல்வாள் - பெருகறிஞர்
|
(146) |
|
|
150 நெஞ்சம் புரைய நிகழ்வுற் றொருசிறிதும் வஞ்சம் புகாத மதர்விழியாள் - துஞ்சி விழுந்த கதிரே யெழல்போல் விழுந்த தெழுந்ததென வொக்கு மெயிற்றாள் - அழுங்கவுரம் மீக்கா ணளவும் வெளிப்படா வுட்பகையை நோக்காது வாழு நுசுப்பினாள் - சீர்க்காமன் மாதரழுக் காற்றால் வடிவிழிவு காணாமல் பேதை யெனவிகழும் பெண்பெருமாள் - காதலுளந் தள்ளத் தமர்போற் றமரலா ரும்மகண்மை கொள்ளக் கருதுங் குறியினாள் - பிள்ளைப்
|
(151) |
|
|
155 பருவத்தா லொத்துப் பகல்விளக்குப் பட்டாங் குருவத்தா லொவ்வா ரொடுதான் - தெருவிற்போய்ச் செங்கணெடு மாலுந் திசைமுகனு மீசனெனப் பங்கமொழி கூறும் படியென்னச் - சங்கம் பழிக்கும் வழுச்சொற் பதர்சேர்த்து வைத்த இழுக்குங் கலியென்ப தென்னக் - கொழிக்கும் புழுதியளைந் தில்லமெனப் போற்றிவிரற் கோலம் எழுதிவிளை யாடி யிருக்கும் - பொழுதிலிசை வேதச் சிலம்பு மிளிர்பதத்தான் மூவெயிலும் காதச் சிலம்பு கரங்கொண்டான் - நாதப்
|
(156) |
|
|
160 பணையா னறிய பசுந்துழாய் நாக அணையா னறிய வரியான் - துணையாய் அடியவரைக் காக்கு மருளான் பனைக்கைக் கொடியவரைக் காக்குங் கொலையான் -கடிகொள் பனியிதழி மாலைப் படர்சடையான் வெற்பின் கனியிதழி மாலைக் கழியான் - இனியநறுங் காவிக் கரிய களத்தினா னெம்முடைய ஆவிக் கரிய வமுதானான் - பாவித் துருகு மகத்தை யுவப்பா னிகழ்வால் அருகு மகத்தை யழிப்பான் - பெருகும்
|
(161) |
|
|
|
146.145-150. ஒக்கலை-மருங்கு. தக்ககிலாள்- தகுதியற்றவள். பொருவு-ஒப்பு. விழிமணி-கண்மணி. 151.150-155. புரைய-ஒப்ப. துஞ்சி-மறைந்து. எயிற்றாள்-பற்களையுடையவள். உரம் மீக்காண் அளவும்-மார்பின் மேலே காணும் வரையிலும். நுசுப்பு-இடை. காமன்மாதர்-இரதி. தமரலார்-உறவினரல்லாதவர். மகண்மை-மகளாந்தன்மை. 156.155-160. புழுதியளைந் தில்லமென-மணலாற் சிற்றில் இழைத்து. மூவெயிலுங்காத-முப்புரங்களையும் அழிக்க. சிலம்பு-மலைவில். 161.160-165. நாதப்பணையான்-இசை பாடும் வேய்ங்குழலையுடைய திருமால். துழாய்- துளசி. பனைக்கை-பனை போன்ற கைகளையுடையானை. கடிகொள்-மணங்கொண்ட. காவி-கருங்குவளை. பாவித்து-உள்ளத்தில் எண்ணி. உவப்பான்-மகிழ்வான். மகம்-தக்கனது வேள்வி.
|
|
|
|