11. திருவெங்கையுலா |
|
|
165 உருப்பவள மாய வொருவ னிரதி விருப்பவள மாய விழித்தான் - பொருப்புவளர் மங்கைக் குழையாய் மழுத்தனக்கென் றேந்துவோன் சங்கைக் குழையாச் சமைத்தபிரான் - வெங்கைப் பழமலையா னாளும் பதியிலான் சீற்றம் எழமலையா னாளு மிறைவன் - தொழமலையான் வாழி யரம்பையர் தார் வண்டலயர் பேதையராப் பூழி யெழுந்தளகம் போய்ப்படிய - ஆழிநெடுஞ் செம்பொற் கொடித்தேர் திருமறுகி னூர்ந்துவர அம்பொற் கொடிகுறுகு மன்னையரோ - டும்பர்க்
|
(166) |
|
|
170 கரியா னெதிர்சென் றவர்தாழத் தாழ்ந்து பெரியா னிலைசிறிதும் பேதை - தெரியாமல் அன்னைமீ ரித்தே ரமர்பவன்யார் மைந்தனிது பன்னுகவென் றாடைமுதல் பற்றுதலும் - மின்னனையார் வற்புறுத்த வோர்பொருளை வள்ளுவனார் பத்துமுறை சொற்பொருத்தி யோதுந் துணிவுபோல் - தற்பதத்தால் ஓதும் பிரமமொரு தானென்ப தொன்றனைமால் காதுபவம் பத்தெடுத்துக் காட்டினோன் - சாதம் இவட்குநா மேதென் றியம்புவமென் றெண்ணித் துவக்கும் வினைவழியாற் றோன்றும் - எவர்க்குமிவன்
|
(171) |
|
|
175 தந்தையே யன்றித் தனையனா காதவன்காண் அந்தமில்சீர்க் காரைக்கா லம்மைதனை - முந்தொருநாள் தப்பா வருளாற் றனக்கம்மை யென்றவன்காண் அப்பா வெனுமொழியு மன்பினால் -துப்பார் அயிலேர் மகன்மாட் டறிந்தவன்கா ணெங்கள் மயிலே யெனவுரைப்ப மற்றும் - வெயிலேர் இழையா ளிவனூ ரெவணுரையு மென்ன உழையா ரிவனூர்நம் மூர்தான் - அழையாய் விளையாட வென்று நகைத்து விளம்ப முளையா முலையிளையாண் மோகங் - கிளையாள்
|
(176) |
|
|
|
166.165-170. விருப்ப-விருப்பத்தையுடைய. வளம்-காமன். குழையா-காதணியா. பதியிலான்- தனக்கொரு தலைவனில்லாதவன். மலையான்-போர் புரியாதவன். தொழ மலையான்-தன்னை வணங்குவோரிடம் மாறுபடாமலிருப்பவன். பூழி-புழுதி. 171.170-175. பெரியான்-பெரியவனாகிய கடவுள். பன்னுக-கூறுக. காதுபவம்-வருத்துகிற பிறவி. சாதம்-உண்மை. துவக்கம்-வலிக்கின்ற. 176.175-180. துப்பார்-வலிமை பொருந்திய. வெயில்ஏர் இழையாள்-ஒளிதங்கிய அழகிய அணிகலன்களை அணிந்த பேதை. எவண்-எவ்விடத்தது. உழையார்-பக்கத்திலுள்ளவர்கள். முளையா-தோன்றாத. கிளையாள்-தோன்றாதவளாகி. படிவம்-வடிவம்.
|
|
|
|