| 11. திருவெங்கையுலா |
|
| |
395 ஆடை குலைந்தா ரணைந்தாவி தாரீரென் றேடவிழ்பூந் தாண்முன் னிறைஞ்சினார் - நீடழலில் காட்டு மரக்கிற் கருத்துக்கா ரென்னவுயிர் கூட்டுண் மலர்க்கட் கொடியிடையாள் - கேட்டு மடவார்கட் கெல்லாம் வசைவிளைத்தா ரென்றச் சடைவா னவன்றானென் றன்பால் - அடைவானேல் நாவனகர் நம்பிபெரு நன்மணப்பூம் பந்தரிடைப் பாவலர்முற் கூறும் பழிமொழியை - யாவர்களும் கூற வெருக்கணிந்த கோல முதவியா ஏறமடன் மாவையெளி தேற்றுவலென் - றூறமுதம்
|
(396) |
| |
| |
400 அன்ன மொழியா லறைதலுமுக் கட்கனிமுன் சின்ன முனிமகளிர் சிந்தைகவர் - தன்னனையான் வந்தா னெனமுழங்க மாதெண்ண முற்றியதென் றந்தா மரைத்தா ளணிசிலம்ப - முந்தா இறைவனெதி ரேற்றா ளெழிற்பெருக்கங் கண்ணால் குறைவ தறமுகந்து கொண்டாள் - கறைமிடற்றுப் பண்ண வனைமொழிந்த பாவ முடன்பலித்து வண்ணநறுந் தூசு வளையொழியக் - கண்ணிணையுள் நீர்பெருக நெஞ்ச நிறையழிய மென்முலைகள் பீர்பெருகச் செவ்வாய் பிழைபிதற்ற - ஏர்பெருகு
|
(401) |
| |
| |
405 மாதவர்த மாதருற்ற வாறுமின்றிக் கயைாற்றில் சாதலுறு வார்போற் றனைமறந்தாள் - கோதையாள் தானோ பழமலையைச் சார்ந்தசைப்பா ளென்றுமொழித் தேனோ வெனுஞ்சொற் றிருமுகத்தில் - வானோர் தனிநா யகன்முடியிற் றண்புனலீ தென்று பனிநீர் தெளித்தணிப்பப் பாவை - முனியாள் உணர்ந்தவச நீங்கி யொழிந்தாள் வளைகள் புணர்ந்த முலைபசலை பூத்தாள் - கொணர்ந்த தொடைபொடிப்ப வெண்டரளஞ் சுண்ணம் படமெய் யிடையடுத்தார் நீங்குவெதுப் பேற்றாள் - சடையடக்கக்
|
(406) |
| |
|
| |
396.395-400. குலைந்தார்-கலையப் பெற்றார்கள். அணைந்து-சேர்ந்து. ஆவி-உயிர். நாவல்நகர்-திருநாவலூர். நம்பி-சுந்தரர். மடன்மா-பனங்கருக்காற் செய்த குதிரை. 401.400-405. கறைமிடற்றுப் பண்ணவன்-சிவபிரான். வண்ண நறுந்தூசு-அழகிய நல்ல ஆடை. பிழை பிதற்ற-பிழையான சொற்களைப் பேச. 406.405-410. மாதவர்தம் மாதர்-தாருகாவன முனிவர்களின் மனைவிமார். அவசம்-மயக்கம். புணர்ந்த-நெருங்கிய. வெதுப்பு-வெப்பம்.
|
|
|
|