முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
410   கங்கைநீ ரன்றேயிக் கண்ணீ ரெனவழுதாள்
     பொங்கெரியின் வீழ்பறவை போன்றினைந்தாள் -மங்கையர்கள்
     சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
     சொல்லிய வண்ணஞ் செயலென்று - மெல்லியலைக்
     கொண்டு மனையிற் குறுக மலருண்டு
     வண்டுபடுங் கூந்தன் மலர்விழியாள் - பண்டு
     திருமாலு நான்முகனுந் தேடும் பொருளைக்
     கருமா மிடற்றெங் கரும்பைப் - பெருமானைத்
     தெள்ளமுதைத் தெய்வ சிகாமணியைத் தன்னடியார்
     உள்ளுயிரைத் தோன்றா வுறுதுணையைக் - கள்ளவிழுங்
(411)
415   கொன்றைப் பவளநெடுங் குன்றைப் பழமலையை
     மன்றிற் குனிக்குமொரு மாமணியைச் - சென்றுற்
     றுளத்துப் புணர்ந்துவிடா தோங்கின்ப முற்றாள்
     கிளத்தற் கரியபெருங் கீர்த்தி - வளத்தொடுறும்
     நாடு நிலைநிற்ப நம்பன் செலுத்தப்போய்
     நீடுதிருத் தேர்நிலையி னின்றதால் - ஆடு
     படைக்கண் மகளிர் பலரிவ்வா றாகக்
     கடைக்க ணருள்சிறிது காட்டிச் - சடைக்கண்
(416)
416   நிலாவினான் வெங்கை நிலையினா னாதி
      யுலாவினான் போந்தா னுலா.
     
     நேரிசைவெண்பா
     
     பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீறாக
     ஓதை யெழுகடல்போ லோங்கினோர் - காதலுறச்
     சிந்தா மணிநெடும்பொற் றேரிற் றிருவுலாத்
     தந்தான் பழமலைநா தன்.
(421)
சிறப்புப்பாயிரம்

நேரிசைவெண்பா
வெங்கைப் பதிப்பழய வெற்புக் கணிமுழுதுந்
தங்கத் திருவுலாச் சாற்றினான் - சங்கத்துப்
போற்றுந் தமிழ்நூல் பொதுக்கடிந்தா னென்றுலகஞ்
சாற்றுஞ் சிவப்பிரகா சன்.

திருவெங்கையுலா முற்றிற்று.
(422)

411.410-415. இனைந்தாள்-வருந்தினாள். கருமா மிடறு-மிகக்கரிய கழுத்து. மன்றில் குனிக்கும்-பொன்னம்பலத்தில் ஆடும். கிளத்தற்கு-கூறுதற்கு. நிலாவினான்-திங்களை யணிந்தவன். ஆதியுலாவினான்-சேரமான் பெருமாளால் பாடப்பெற்ற ஆதியுலாவை யுடைய சிவபெருமான்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்